Friday, December 26, 2008

தடுப்பு மருந்து உற்பத்தியை துவக்குக

மத்திய அரசு பொதுத்துறை மருந்து உற் பத்தி நிறுவனங்களில் தடுப்பு மருந்து உற்பத் தியை நிறுத்தி வைத்துள்ளது. இதை உடனடி யாக ரத்து செய்து மீண்டும் உற்பத்தியை துவங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.ரங்கராஜன், பிரதமரி டம் கடந்த வாரம் மனு அளித்தார். அந்த மனு வில் கூறப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டி டியூட் நிறுவனம் 1907ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஒரு பிரிட்டிஷ் உயரதிகாரி யின் மனைவி நாய்கடித்து இறந்து போன தைத் தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பணக்கார பிரமுகர் ஒருவர் கர்சன் பிரபுவுக்கு பரிசாக அளித்ததே இந்த நிறுவனம். அந்த காலத்தில் வட இந்தியாவில் இமாச்சலப்பிர தேசத்தில் கசௌலி என்னும் இடத்தில் உற் பத்தி செய்யப்பட்டதை தவிர வேறு எங்கும் நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி செய்யப்பட வில்லை. அப்போது இருந்து குன்னூரிலும் இந்த மருந்து உற்பத்தி துவங்கியது. 1977ம் ஆண்டு முதல் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் ஒரு சுயாட்சி நிறுவனமாக செயல்பட்டு வந்த பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், அப்போது பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை உற் பத்தி செய்வதில் நவீன மருத்துவத் தொழில் நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்க லைக்கழகம், மற்றும் கோவை பாரதியார் பல் கலைக்கழகம் ஆகியவற்றில் எம்.டி. மற்றும் பிஎச்டி ஆராய்ச்சிகளுக்கான நிறுவனமாக வும் இது இருக்கிறது. அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கிய இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவிலேயே வெறி நாய்க் கடிக்கான மருந்தை கண்டுபிடித்து உற்பத்தி செய்தது. இங்குள்ள நூலகம் தடுப்பு மருந்து உற்பத்தித்தொடர்பாக ஆராய்ச்சியின் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவுச்சுரங்கம் ஆகும்.

ஆனால், இவ்வளவு மிகச்சிறந்த நிறு வனத்தில் உற்பத்தி முறை சரியில்லை என்று ஒருசாதாரண காரணத்தைக் கூறி மத்திய சுகாதாரத்துறை திடீரென்று உற்பத்தியை நிறுத்தியிருக்கிறது.

இதே போல சென்னை கிண்டியில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து ஆய்வகம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் ஒட்டுமொத்த தடுப்பு மருந்து தேவைகளையும் பூர்த்தி செய் கிற நிறுவனமாக உள்ளது. ஆனால் இங்கும் திடீரென்று அரசு உற்பத்தியை நிறுத்திவிட் டது. இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு தலை மை அதிகாரி, இந்நிறுவனத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகப்படுத்த வேண் டும் என்றும் எதிர்காலத்தில் மருத்துவக் கரு விகளுக்கான ஆராய்ச்சி மையமாக இது உரு வாக வேண்டும் என்றும் பரிந்துரை செய்தி ருந்தும்கூட உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனமான இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கசௌலி யில் அமைந்துள்ள தி சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், தென்கிழக்கு ஆசியாவிலே யே மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து உற்பத்தி செய்கிற ஒரே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 மே மாதம் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரின் தலைமை யில் அமைக்கப்பட்டிருந்த குழுவானது, மேற் கண்ட மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு மருந் தை உலகத்தரத்தில் உற்பத்தி செய்வதற்கு கசௌலி ஆராய்ச்சி நிறுவனத்திலும், குன்னூ ரில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்திலும் ஏற்பா டுகள் உள்ளன என்றும் இவ்விரண்டு இடங் களிலும் உற்பத்தி செய்யலாம் என்றும் பரிந்து ரைத்தது. ஆனால் இங்கும் கூட உற்பத்தியை நிறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் ரூ.400 கோடி செலவில் ஒரு தடுப்பு மருந்து பூங்காவை உருவாக்கு வது என்று சுகாதார அமைச்சகம் முடிவு செய் துள்ளது. இது 2012ம் ஆண்டில் செயல்பாட் டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேவையான தடுப்பு மருந்தை எப்படிப் பெறுவது என்று சுகாதார அமைச்சகம் இது வரையிலும் உரிய விளக்கம் வெளியிடவில் லை. ஏற்கெனவே சிறப்பான முறையில் இயங்கிவரும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி அல்லது ரூ. 60 கோடி கொடுத்து மேம் படுத்துவதற்கு தயங்கும் அமைச்சகம். மிகப் பெரும் அளவில் செலவிட முயற்சி செய்வது ஏன்?

 டி.கே.ரங்கராஜன்