Friday, January 23, 2009
போராட்டம் வெற்றி ! மூடப்பட்ட தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் தனியார் நிறுவனங்கள் ஏமாற்றியதால் மத்திய அரசு முடிவு
Monday, January 5, 2009
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சில தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’
- “அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரநிர்ணயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும், மருந்துக் கம்பெனிகளிடமிருந்தும் பெறப்பட்டிருக்கிறதா?”
என்றும் பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.
மேலும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங் கள் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத் தை அடைவதற்கான முறையில் மேம்படுத்திட, ஆகும் செலவினத்தின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்ச கத்தைக் பிரதமர் அலுவல கம் கேட்டுள்ளது.
“மேற்படி பொதுத் துறை நிறுவனங்களை உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட அரசுக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். ஆனால் அதைச் செய்வதை விடுத்து, அதைவிட பல மடங்கு ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி மருந்துகளை வாங் கிக்கொண்டிருக்கிறது’’ என்று டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 11 கேள்விகளை எழுப்பியுள்ள பிரதமர் அலுவலகம், தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்த பொதுத்துறை நிறுவனங்களை மூடிய செயலானது, ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி யுள்ளது.
“ஐமுகூ அரசாங்கமானது உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்துகளின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வகைசெய்யும் விதத்தில் மேற்படி பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயு மாறும்’’ பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
நன்றி தீக்கதிர்