Saturday, August 2, 2008

குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்

நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட நோய்த்தடுப்பே சிறந்தது என்ற நோக்கத்துடன் தேசிய நோய்த்தடுப்பு திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பிறகு அது விரிவுபடுத்தப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (EPI), என்று மாற்றப்பட்டு நம் நாட்டில் அமலாக்கப்பட்டு இலவசமாக நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்கி வந்தது. பிறகு முழுமையாக்கப்பட்ட நோய்த்தடுப்பு திட்டம் (UIP) என்று மாற்றப்பட்டு மேலும் கூடுதலாக நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்தவுடன் துவங்கி 9 மாதத்திற்குள் பலவிதமான நோய்த்தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகின்றன.

அரசு நீண்டகாலமாக குழந்தைகளுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கிவருகிறது. தொண்டை அடைப்பான், காசநோய், கக்குவான், இருமல், கர்ப்பகாலங்களில் ஏற்படும் ரனஜன்னி, மூளைக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம் போன்ற கொடிய நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரு ஆண்டில் பிறக்கும் சுமார் 2.60 கோடி குழந்தைகளுக்கும் புதுவையில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு மருந்ததுகள் 80%-ம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டுவந்தது. சென்னை கின்டியில் உள்ள பி.சி.ஜி.யூனிட், குன்னுரில் உள்ள பாஸ்டியர் யூனிட், இமாச்சலபிரதேசத்திpல் உள்ள கசௌலி ஆய்வு மையம் ஆகிய 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களிலும் இவ்வாண்டு ஜனவரி 15 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரனமாக பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மெல்ல மெல்ல இலவச தடுப்பூசித் திட்டம் கைவிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. 2000-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுகாதார வசதி வழங்கிட வேண்டும் என்ற சர்வதேச மாநாட்டின் முடிவை அமலாக்குவதற்கு மாறாக தடுப்பூசி மருந்துக்கே கட்டணம் என்ற நிலை ஏற்படும் அயாயம் உருவாகி உள்ளது.

இன்றைய சூழலில் மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சுகாதாரம், நோய்த்தடுப்பு போன்றவற்றில் அனைத்து தரப்பு மக்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட, பெரும்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இந்திய நாட்டில் இன்றளவும் 65% மக்கள், மருத்துவரால் இன்றளவும் பெரும்பான்மையான குழந்தைகள் ஊட்டசத்தின்மையால் பாதிப்படைந்துள்ளனர். இன்றளவும் கர்ப்பக்கால மரணம் மற்றும் குழந்தை இறந்தே பிறப்பது, பிறந்து சிறிது நேரத்தில் இறப்பது போன்றவை கணிசமான அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தேசிய நோய் தடுப்பு திட்டம் போன்றவைக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டாலும், போலியோ, காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உயிரிழப்பு பெருமளவு தொடர்ந்து கொண்டிருக்கிறது

மருந்து உற்பத்திக்கான (எந்த வடிவிலிருந்தாலும்) செலவு என்பது மருந்தின் மொத்த விலையில் 150% முதல் 500% வரையில் குறைவு என்பதாகும். இந்த அடிப்படையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தம் என்பது, நேரடியாக இலவச நோய்த்தடுப்புதிட்டத்தை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இதற்கு எதிரான எல்லா நடவடிக்கையை ஆதரிப்போம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ள இலவச தடுப்பூசி திட்டத்தை பாதுகாப்போம். குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாப்போம்.

No comments: