Thursday, April 9, 2009

மனித நேயம் கொண்ட சுகாதார சேவை

மீண்டும் சொல்லி அலுத்துப் போனாலும் அடிப்படை உண்மையை ஆழப்பதிந்து வைத்துள்ள திருக்குறள்

"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்"

என்பது. மருந்து என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளினை எந்த விஷயத் திற்கும் பயன்படுத்தலாம் என்றாலும் சுகாதாரத் திற்கு நுட்பமான விளக்கம் தருவது இது.

நோயின் மூலக் கூறி னை ஆய்வு செய்து அத னை முளையிலேயே கிள்ளி எறிவது போன்றது தான் தடுப்பூசிகளும், தடுப்பு மருந்துகளும். அதிலும் குறிப்பாகக் குழந்தை களுக்குத் தடுப்பூசி போடு வது எதிர்காலத் தலை முறையை ஆரோக்கியமாக வைப்பதாகும்.

இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, கக்குவான் இருமல், காசநோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களைத் தடுக்க பிசிஜி, சொட்டு மருந்து, முத்தடுப்பு ஊசி போன்றவை பயன் பாட்டில் இருந்தது; இருக் கிறது. இத்தகைய தடுப் பூசிகள் போட்டு தடுப்பு மருந்துகள் பல ஆண்டு களாகக் கொடுக்கப்பட்ட தால் பிறந்த ஓராண்டில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு நூறு என்பதிலிருந்து 30க் கும் கீழாகக் குறைந்து விட்டது.

ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 6 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப் பட்ட பிசிஜி காரணமா கவே இன்று பல வகை யான காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. இதே போன்று முத்தடுப்பு ஊசி, ஜன்னி தடுப்பு ஊசி போன் றவை குழந்தைகளுக்கு மட் டுமின்றி பெரியவர்களுக் கும் பேறுகாலத்தில் தாய் மார்களுக்கும் பயன்படு கின்றன.

இவை அனைத்தும் பொதுத்துறையில் இயங்கி வந்தன. இதனால்தான் குறைந்த விலையில் அர சுக்கு இவை கொடுத்தன. அரசோ மக்களுக்கு இல வசமாகக் கொடுத்தது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1985ம் ஆண்டு தீவிரப் படுத்தப்பட்ட நோய்த் தடுப்பு தீவிரத்திட்டம் அவரது கட்சிக்காரர்க ளின் ஆட்சியிலேயே முட மாக்கப்படுகிறது. கிண்டி (சென்னை), குன்னூர் (நீல கிரி), கசோலி (இமாச்சலப் பிரதேசம்) ஆகிய இடங் களில் உள்ள தடுப்பூசி மருந்து தயாரிக்கும் மூன்று நிறுவனங்களுக்கும் மூடு விழா நடத்தித் தனியார் நிறுவனங்களுக்கு வர வேற்பு அளிக்க முன் வருகி றார்கள் என்பதை அண் மையில் குழந்தைகள் பாது காப்பு இயக்கம் அம்பலப் படுத்தியது. பிசிஜி நிறுவ னம் அரசுத்துறையின் கீழ் கிண்டியில் துவக்கப்பட்ட போது ராஜாஜி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். அந்தப் போராட்டத்தில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் இன்றைய ஆட்சி யாளர்கள் ராஜாஜியின் தனியார்மயக் கனவை நன வாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.

ஆனால் அந்த முயற்சி அவ்வளவு எளிதாய் வெற்றி பெற்றுவிடாது என்பதை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் அறிக்கை உறுதி செய் கிறது. தடுப்பூசி மருந்து களையும், அத்தியாவசிய மருந்துகளையும் தயாரிக் கும் பொதுத்துறை நிறுவ னங்கள் மீண்டும் இயக்கப் படும் என்ற இக்கட்சியின் வாக்குறுதி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நோய் முதல் நாடுதல் என்ற அம்சம் இதிலே தான் இருக்கிறது. அத்தியா வசிய மருந்துகள் அனைத் தும் பொதுத்துறையில் தயாரிக்கப்பட்டால் மட் டும் போதுமா? உரியவர் கள் பயனடைய என்ன வழி? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கும் பதில் அளித்துள்ள சிபிஎம் தேர்தல் அறிக்கை, பொதுச்சுகாதார அமைப் புகளான அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்கள் போன்ற வற்றின் மூலமே தொடர்ச் சியாக இத்தகைய மருந்து கள் வழங்கப்படும்; அத்தி யாவசிய மருந்துகள் அனைத்தும் விலைக்கட் டுப்பாட்டு திட்டத்துக்குள் கொண்டுவரப்படும் என்று உறுதி கூறியிருப்பது மக் களின் மிகுந்த கவனத்துக் குரியவை. ஆபத்து விளை விக்கக் கூடிய மருந்துகள் சந்தையிலிருந்து முற்றிலு மாகக் களையப்படும் என்று அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதி மிக முக்கிய மானது. நோயை விட நோய்க்கான மருந்து கொடியது என்ற நிலை இதன் மூலம் நீங்கும்.

அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் எளிதில் அணுகும் நிலையில் இல் லாததால் நோயால் பாதிக் கப்படுவோர் இவற்றை நாடுவதில் சிரமம் உள்ளது. எனவே அனைத்துவகை யான சுகாதார சேவை களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென் றால், இவை மக்கள் எளி தில் சென்று உடல் நிலை யை கவனித்துக் கொள் ளும் தூரத்தில் இருக்க வேண்டும். இதற்கேற்பவும், பொதுசுகாதார முறை வலுப்படுத்தப்படும்; விரிவு படுத்தப்படும் என்று சிபி எம் உறுதியளித்திருக் கிறது. மேலும் மும்மயக் கொள்கைகளின் விளைவு சுகாதாரத்துறை மீதும் தொற்றுநோயாய் பற்றிக் கொண்டுள்ளது. அரசும் தனியாரும் இணைந்த கூட் டுத்துறை என்ற அளவில் மாற்று வடிவத்தனியார் மயப்போக்கு அகற்றப் படும் என்பதும் ஏழை - எளிய மக்களின் நலன் காக் கும் வாக்குறுதியாகும்.

இத்தனையையும் நிறை வேற்ற நிதி ஆதாரம் மிக மிக அவசியம். இதற்கான வழி என்ன? சுகாதாரத் துக்கான செலவு என்பது உண்மையில் மனித ஆற்றலுக்கான மூலதனமா கும். எனவே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத அளவுக்கான நிதி பொதுசுகாதாரத்திற்கு செலவிடப்படுவதை உறுதி செய்கிறது சிபிஎம் தேர்தல் அறிக்கை.

மனிதர்களை மனிதர்களாக மதித்து அவர் களுக்கு சிகிச்சை அளிப் பது, மறுவாழ்வு கொடுப்ப தும் சுகாதார சேவையில் இன்றியமையாதது. ஆனால் மருந்து தயாரிப் பில் ஈடுபடும் சில `மெகா' நிறுவனங்கள் நோய்வாய்ப் பட்டவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே சில மருந்துகளை வழங்கி விஷப் பரீட்சை செய்கின் றன. இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்படும் என் றும், மருந்துகளின் சோத னைக்குக் கடுமையான கட் டுப்பாடுகள் கொண்டு வரப்படும்; விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் சிபிஎம் தேர்தல் அறிக் கையில் கூறியிருப்பது அக் கட்சியின் மனிதநேயத்தை யும், சுகாதார சேவைத் துறையில் தார்மீக பொறுப்பை நிலைநாட் டும் பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது என லாம்.