Friday, November 5, 2010

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் யுகம் முடிந்துவிட்டதா?

உடலில் செலுத்தப்படும்போது சில வகையான நோய்க்கிருமிகளை வளரவிடாமல் தடுத்து அந்த நோயை எதிர்த்துப் போராடும் சக்தியைக் கொடுக்கும் வேதியியல் பொருட்கள் `நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள்’ என அழைக்கப்படுகின்றன. சுமார் 60 ஆண்டு காலமாக மருத்துவ உல கில் அவற்றின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

1929ஆம் ஆண்டில் அலெக் ஸாண்டர் ஃப்ளெமிங் (1881-1955) பெனிசிலின் என்ற மருந்தைக் கண்டுபிடித்த திலிருந்து ஆன்ட்டிப யாட்டிக் யுகம் தொடங்கியது. 1940-களில் பெனிசிலினைத் தாராளமாகப் பயன்படுத்தும் சிகிச் சை முறை வேரூன்றத் தொடங்கியது. 1942ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 33 வயது பெண்மணி ஒருவர் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற நுண்கிருமியின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோயினால் பீடிக்கப்பட்டு உயிருக் குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது ரத்த ஓட்டத்தி லிருந்து அந்த நுண்கிருமிகளை அகற்ற முடியவில்லை. கடைசியில் ஒரு சிறிதளவு பெனிசிலினை அவ ரது உடலில் செலுத்தினர். முன் னேற்றம் தெரிந்தது. மேலும் சில தடவைகள் பெனிசிலினைச் செலுத் தியதும் ஆச்சரியமான முறையில் அவர் முற்றிலும் குணமடைந்து பின்னர் 91 வயது வரை வாழ்ந்து மறைந்தார் !

பெனிசிலின் யுகம் இப்படித் தான் ஆரம்பமானது. நிமோனியா, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு பெனிசி லின் அருமருந்தாகப் பயன்பட்டது. ஆனால் டைஃபாய்டு, இன்ஃப்ளூ யன்சா போன்ற வேறு பல நோய் களை எதிர்த்துப் போராட பெனி சிலினால் இயலவில்லை. எனவே, வேறு ஆன்ட்டிபயாட்டிக் மருந்து களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடங்கியது. நிமோனியா, ஸ்கார் லெட் காய்ச்சல், ரத்தத்தில் விஷக் கலப்பு போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தவல்ல சல்ஃபோன மைட் 1940-களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காசநோய், டைஃபாய்டு போன்ற தொற்று நோய்களைக் குணப்படுத் தும் ஸ்ட்ரெப்டோமைசின், மூளை, தண்டுவடத்தைப் பாதிக்கும் நோய் கள் அல்லது தோல், கண், காது களைப் பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்த களிம்பு அல்லது சொட்டுமருந்து வடிவில் குளோ ராம்பினிகால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று, சில பால்வினை நோய்களைக் குணப்படுத்த டெட் ராசைக்ளின் ஆகிய ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட் டன. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் துணையின்றி எந்த அறுவை சிகிச்சையோ, புற்றுநோய் சிகிச் சையோ அல்லது எச்.ஐ.வி. சிகிச் சையோ மேற்கொள்ள முடியாது என்ற நிலை கடந்த ஆண்டுகளில் தோன்றிவிட்டது. தற்போது அதற்கு ஆபத்து வந்துவிட்டது.

நுண்ணுயிர்களும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும்

ஒரு மனிதருக்கு வெட்டுக்கா யம் ஏற்படும்போது தோலில் ஏற் படும் வெடிப்பின் வழியாக உடலுக் குள் சில தீயவகை கிருமிகள் புகுந்துவிடும். அந்த மனிதர் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் அவரி டம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தேவையற்ற கிருமிகளோடு போராடி அவை உடலுக்குள் நுழைவதைத் தடுத்துவிடும். பலவீனமான உடல் நிலையுடன் அவர் இருந்தாலோ கிருமிகள் வீரியமிக்கவையாக இருந்தாலோ அவை நோயை உரு வாக்குவதில் வெற்றிபெற்று விடு கின்றன. காயங்கள் வழியாகத் தான் நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழைய வேண்டுமென்பதில்லை. உணவு, தண்ணீர், காற்று, உமிழ் நீர், உடலிலிருந்து வெளிப்படும் பிற திரவங்கள் என எதன்வழியாக வும் அவற்றால் நுழைந்துவிட முடி யும். நம் உடலில் கோடிக்கணக் கான நுண்ணுயிர்கள் (செல்க ளின் எண்ணிக்கையைப் போல் 10 மடங்கு) உள்ளன! அவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தீங்கு செய்யாதவையே. நட் புணர்வுடன் உள்ள பல நுண்ணுயிர் களை ஆன்ட்டிபயாட்டிக் மருந்து கள் அழித்து விடுவதால், அம்மருந் துகள் நோயைக் குணப்படுத்தும் சக்தியை காலப்போக்கில் இழந்து விடுகின்றன. நோய்க்கிருமிக ளோடு போராடி அவற்றை அகற்ற வல்ல அதிசய மருந்துகளாக ஒரு காலத்தில் கருதப்பட்ட அவை இன்று அக்கிருமிகளோடு போரா டும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இருந்த கையறு நிலையை அநேக மாக இன்று அடைந்து விட்டோம். மருத்துவ உலகம் சந்திக்கும் மிகப் பெரிய சவால் இது. (ஆதாரம் : சயன்ஸ் ரிப்போர்ட்டர்)

மருத்துவ வல்லுநர்கள் இன்று பரிந்துரைப்பவை

மிகமிக அவசியமாகத் தேவைப் பட்டாலொழிய ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஆன்ட்டிபயாட்டிக் சிகிச்சையை அரைகுறையாகச் செய்யாமல் தீங்கு விளைவிக்கும் கிருமி கள் முழுமையாக அகற்றப்படும் வரை தொடர வேண்டும். காய் கறிகள், பழங்களை நன்கு கழுவிய பிறகே உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது கைகளை நன்கு கழுவிக் கொள்வது பாதுகாப்பைத் தரும். மருத்துவரின் பரிந்துரை யின்றி கடைகளில் ஆன்ட்டிபயாட் டிக் மருந்துகளை நாமே வாங்கி உட்கொள்வது ஆபத்தானது.

Wednesday, November 3, 2010

மருந்துகளும், குறைபாடுகளும்

டவானா வில்லியம்ஸ், சாப்பிடுவது, தலைமுடியை சீவி, பின்னிக் கொள்வது, டைப் ரைட்டரில் டைப் அடிப்பது என அனைத்து வேலைகளையும் தனது கால்விரல்களால்தான் செய்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியில்லை.

1960களில் உலகில் பிறந்த குழந்தைகளில் 12,000 பேருக்கு ஊனம். “தலிடோமைட் டிராஜடி” என மருத்துவ வரலாற்றில் அழைக்கப்படும் இது ரத்தக்குழாய்களை பாதித்து, கை, கால், கண்கள், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.

1957ல் மேற்கு ஜெர்மானிய நிறுவனமான “க்ருனென்தால்” தூக்கமின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு தூங்க வைக்க “தலிடோமைட்” என்ற மருந்தை கண்டுபிடித்தது. விற்பனையும் செய்தது. எதேச்சையாக, அது வாந்தியை குணப்படுத்துமென கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி வருவதை தடுக்க கொடுக்கப்பட்டது. ஆனால், இதை சாப்பிட்ட தாய்மார்கள் பிரசவித்த குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இதை தயாரித்த நிறுவனமான ‘க்ருனென்தால்’ எலிகள் மீது பரிசோதித்த பொழுது அபாயகரமான விளைவுகள் எதுவும் தெரியவில்லை என்று கூறிவிட்டது. ‘தலிடோமைட்’ கருவில் வளரும் குழந்தையை எப்படி பாதிக்கிறது என்பது புரியாமலேயே இருந்தது.

சமீபத்தில் (மார்ச் 12, 2010 சயன்ஸ் இதழ்) ஜப்பானிலுள்ள “டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி” வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், தலிடோமைட் மருந்தில் உள்ள செரிப்லான் (உநசநடெடிn) என்ற புரதம்தான் எலும்பு வளர்ச்சியை பாதிக்கிறது என தெரிவித்துள்ளது. ஆய்வாளர் ஹிரோஷி ஹண்டா, மீன்கள் மீது பரிசோதனை நடத்தியதில் தெரிய வந்த பின், கோழி குஞ்சுகள் மீதும் பரிசோதனை செய்ததில் அதே முடிவுக்கு வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சுவ்ரோ சட்டர்ஜி மற்றும் கே.பி.சந்திரசேகர் ஆகியோரும், இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பம் தரித்த முதல் 5 வாரங்கள் மிகவும் முக்கியமானவை. கை, கால் வளரத் துவங்கும் இந்த சமயத்தில் தலிடோமைட் தாக்குதலால் பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கிறது.

1962ல் தடை செய்யப்பட்ட இந்த மருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து மீண்டும் சந்தையில் விற்கப்படுகிறது. 2006ல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தலிடோமைட் மீதான தடையை நீக்கிவிட்டது. ஆனால் குஷ்டம், மைலோமா எனப்படும் ஒரு வகை புற்றுநோய்க்கு மருந்தாக கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்படுகிறது.

2008ல் ஜப்பானிலும், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்த இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2002ல் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி பெற்று “டாபர் இந்தியா” குஷ்டத்தை குணப்படுத்த இதை விற்று வருகிறது. பிரேசிலிலும், மீண்டும் இது உபயோகத்திற்கு வந்துள்ளது. மீண்டும் “தலிடோமைட் குழந்தைகள்” பற்றிய அறிவிப்பு வெளியாகிறது. 1960களில் எப்டிஏ அனுமதி இன்றியே கர்ப்பிணி பெண்களுக்கு இது தரப்பட்டது. டவானா வில்லியம்ஸின் தாயும் இதை உட்கொண்டவர்தான். புதிதாக ‘தலிடோமைட் குழந்தைகள்’ பற்றி தகவல் வருவதால், இதில் கவனம் தேவை.

மருத்துவத்துறை இதில் கவனமாக இல்லாவிடில், டவானா போன்று பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். “புற்றுநோய், குஷ்டம் போன்ற வியாதிகளை குணப்படுத்துவதால் அதன் எதிர்கால பயன்பாட்டை மேலும் ஆராய வேண்டியுள்ளது, என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம் : லைஃப் சயின்ஸ்

--ஆர்.சந்திரா

Friday, October 15, 2010

தடுப்பூசி ஆலைகளை மூடியதன் அதிர்ச்சிப் பின்னணி முந்தைய சுகாதார அமைச்சகம் முறைகேடு: குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்


தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட 3 பொதுத்துறை ஆலைகளை மூடி யதில் முந்தைய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், உலக சுகா தார அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு டி.கே. ரங்கராஜன் எம்.பி. அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

பொதுத்துறையில் உள்ள தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆலை களை மூடுவது தொடர்பாக ஜாவேத் சவுத்ரி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள் ளது பற்றி பத்திரிகை செய்திகள் வெளியாகியுள்ளன. உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்து ஆலை கள் மூடுவதற்கு உ ங்கள் அமைச் சகத்தின் முன்னாள் உயர் அதி காரிகளும் அப்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் இந்த முறையற்ற செயல்பாடுகளுக்கு காரணம் என குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மூடப்பட்ட இந்த ஆலை களை மீண்டும் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத் தில் தாங்கள் பொறுப்பேற்ற பின் னர் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கடிதம் எழுதினேன். எனது வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்து 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி எனக்கு கடி தம் எழுதி இருந்தீர்கள். தடுப்பூசி மருந்து உற்பத்தி நிறுத்தம் விலக் கிக் கொள்ளப்பட்டு, 3 தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியை அளித் துள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் மூடப்பட்டதில், உலக சுகாதார நிறுவனத்திற்கும் பங்குள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகி றேன். பன்னாட்டு பெரும் மருந்து நிறுவனங்களின் நட வடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் துணை போவது போன்ற நிலை உள்ளது. வளரும் நாடுகளின் முடிவுகளில் ஆதிக் கம் செலுத்துவதாகவும் தெரி கிறது. ஐ.நா. அமைப்புகளில் பெரும் நிறுவனங்களே ஆதிக் கம் செலுத்துவது தொடர்பாக எப்.ஏ.ஓ. இயக்குனர் டாக்டர் சாமுவேல் சி.ஜூட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி மருந்து ஆலைகள் மூடப்பட்ட விஷயத்தில் உலக சுகாதார நிறு வனத்திற்கு உள்ள பங்கு குறித்து ஜாவேத் சவுத்ரி குழு ஆய்வு செய் ததா என்பது எனக்கு தெரியவில்லை.

அப்படி ஆய்வு செய்திருக்க வில்லையெனில், உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் செல்வாக்கு இருப்பது குறித்தும் விசாரணை நடத்தப் பட வேண்டும்.

நமது நாட்டில் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். அவர் களில் மேற்கூறிய விவகாரங் களில் ஆலோசித்து இருக்க வேண் டும். இவ்விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை எதிர் பார்ப்பது ஏன் என்பதற்கான காரணம் எனக்கு தெரிய வில்லை.

உலக சுகாதார நிறுவனத்தில் பன்னாட்டு மருந்துக் கம்பெனி களின் ஆதிக்கம் இருப்பதால் அவற்றின் ஆலோசனையை சீன அரசு ஏற்கவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். தற்போ தைய கமிட்டி ஆய்வு செய்ததில் சில முக்கிய கருத்துக்கள் புலப் பட்டுள்ளன. அதனை நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுத்துறை தடுப்பூசி சப் ளையை பூஜ்ய அளவிற்கு குறைப்பதால் நாட்டின் சுகாதா ரப் பாதுகாப்பில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள பொதுத்துறை தடுப்பூசி மருந்து ஆலைகளை ஒருங்கிணைந்த தடுப்பூசி வளா கம் (ஐ.வி.வி) செயல்பாட்டுக்கு முன் மூடுவதால் நாட்டில் தடுப் பூசி பாதுகாப்பின்மை 5 ஆண் டுகள் அல்லது அதற்கு மேலும் நீண்ட காலம் தொடரக்கூடும் என ஜாவேத் குழு அறிக்கை சுட் டிக்காட்டுவதன் மூலம் முந்தைய சுகாதாரதுறை அமைச்சகத்தின் செயல்பாடு கொடூரமாக இருந் துள்ளதை கண்டறிந்துள்ளது. இத்தகைய தேச விரோத காரி யத்திற்கு காரணமானவர்கள் கடு மையாக தண்டிக்கப்பட வேண்டும்.

Monday, August 30, 2010

கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்; கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள் பொருளாதார நிபுணர் வி.கே.ராமச்சந்திரன் குமுறல்

நாடு விடுதலையடைந்து 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போதும், ஏழை-எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காங்கிரஸ் தலைமையிலான அரசோ, இந்திய முதலாளித்துவ கட்டமைப்போ கொண்டுவர முடியவில்லை என்று மேற்குவங்க திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் வி. கே. ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

நாகர்கோவிலில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) இந்திய மாணவர் சங்கத் தின் மாநில மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:

ஆகஸ்ட் 15 விடிந்தால் சுதந்திர தினம். வண்ண வண்ண பலூன்கள் பறக்க இருக்கின்றன. தில்லி செங்கோட்டை யில், பிரதமர் - ஒரு முறைகூட மக்களி டம் வாக்கு கேட்டு சென்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பிரதமர் - கொடியேற்றுவார். இந்தியாவின் பொரு ளாதாரத்தை மேம்படுத்திவிட்டோம் என்று மீண்டும் ஒருமுறை முழங்குவார். 63 ஆண்டுகளுக்கு முன்பு நாடு விடு தலை அடைந்தபோது அன்றைய பிரதமர் நேரு கொடியேற்றி வைத்து பேசினார். சுதந்திரம் என்பது வறுமைக்கு முடிவு கட்டுவது, சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவது, எழுத்தறிவின்மைக்கு முடிவு கட்டுவது என்று சொன்னார். 63 ஆண்டு களுக்குப் பின்னர் இன்றும் இப்போதைய பிரதமர் நேருவின் அதே வார்த்தைகளை சொல்லப் போகிறார்.

63 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி யாளர்கள் இதையே சொல்லி வருகிறார்கள். ஆனால், இப்போது வரைக்கும் அவர்கள் அந்த இலக்கை எட்டவே இல்லை.

ஒரு முழுமையான மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்று மார்க்ஸ் சொல் கிறார், கலாச்சாரத்தில் உயர்ந்த விழு மியங்கள் கொண்டவராக, கல்வியறிவில் சிறந்தவராக என்றெல்லாம் அவர் பட்டிய லிடுகிறார். மனிதகுல வரலாற்றில், முழுமையான கல்வி - அனைவருக்கும் கல்வி அளிக்காத எந்தவொரு சமூகமும் முழுமை பெற்ற மனித சமூகமாக இருக்க முடியாது என்பதே அதன் அடிப்படை.

நமது தேசத்தின் கல்வி நிலைமை எப்படி இருக்கிறது?

1970களில் சென்னையில் நாங்கள் மாணவர்களாக இருந்தபோது, இந்திய மாணவர் சங்கத்தின் ஒரு பிரசுரத்தை தயாரிப்பதற்காக நாட்டில் எழுத்தறிவற் றோரின் நிலைமை குறித்து ஆராய்ந் தோம். அப்போது, சுதந்திரம் வாங்கும் போது இருந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட எழுத்தறிவற்றோரின் எண்ணிக்கை இருந்தது கண்டு அதிர்ந் தோம். இன்றைக்கும், எழுத்தறிவற் றோரின் எண்ணிக்கை, நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகையை விட அதிகமாகவே இருக்கிறது.

அந்த காலகட்டத்தில் பள்ளி, கல் லூரிகளில் மாணவர் சங்கத்தில் உறுப்பி னர்களை சேர்க்க சென்ற போது ஏராள மான பள்ளிகளில் போதிய ஆசிரியர் இல்லை, ஆய்வுக்கூட வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்தன.

வேதியியல் கற்பிக்கும் ஆசிரியர், ஆய்வுக்கூடம் இல்லாததால் தனது சட்டைப்பையிலிருந்து பென்சிலை எடுத்துக்காட்டி இதை சோதனைக் குழாயாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கற்பனையில் பாடம் நடத்தினார்.

40 ஆண்டுகள் கடந்த பின்னர் இப் போது பல மாநிலங்களில் ஆய்வுக்கு செல்லும்போதும் கூட அறிவியல் ஆசிரி யர்கள் அப்போது போலவே கற்ப னையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

1980-ல் நான் ஆராய்ச்சி மாணவராக இருந்த போது இந்திய மாணவர் சங்கத் தின் ஒரு பட்டறையில் மகத்தான மக்கள் தலைவர் பி. சுந்தரய்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னார்: இந்திய சமூகத்தில் அடிப்படையான மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படாதவரை, இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பார்த் தாலும் இந்தியக் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி பெற்றவர் களின் எண்ணிக்கையை கூட உயர்த்த முடியாது என்றார். அப்போது நாங்கள் அதிர்ந்தோம். 2005 ம் ஆண்டு தேசிய குடும்ப நல சர்வே முடிவுகள் வந்த போது சுந்தரய்யாவின் வார்த்தைகள் எவ்வளவு நிதர்சனமானவை என்பதை உணர முடிந்தது. கிராமப்புற இந்தியாவில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பற்றிய ஆய்வு முடிவு அது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை பெற்ற இந்திய மக்களின் சராசரியை அந்த புள்ளி விபரங் களின் அடிப்படையில் கணக்கிட்டால் ஆண்களை பொறுத்தவரை வெறும் 2 ஆண்டு கல்வி மட்டுமே பெற்றிருக் கிறார்கள். பெண்களை எடுத்துக் கொண் டால் சராசரியாக ஒரு ஆண்டு கல்வி கூட பெறவில்லை. தலித் மக்க ளும் ஒரு ஆண்டு கல்வி கூட பெறவில்லை. அப்படியானால், 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் முற்றிலும் எழுத்தறி வற்றவர்கள் என்பதே பொருள்.

எனவே, இந்திய சமூகத்தில் அடிப் படையான மாற்றத்தைக் கொண்டு வராமல் இந்த நிலைமைகளில் மாற் றம் கொண்டுவர முடியாது.

இதற்கு தடையாக இருப்பவர்கள் யார்?

இந்தியா ஏழைகள் மிகுந்த நாடு. உலகிலேயே மிக மிக அதிகமான ஏழை கள் இருக்கும் நாடு. ஒட்டு மொத்த மக்கள் தொகையை கணக்கிட்டால் 65 கோடி மக்கள் போதிய உணவின்றி, போதிய சுகா தார வசதிகள் இன்றி, போதிய கல்வி யின்றி, அனைத்து விதத்திலும் வறுமை யின் பிடியில் சிக்கி நிற்கும் மக்கள். ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கும் (சுமார் ரூ. 100) குறைவாக வருமானம் இருந்தால் அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று உலகவங்கி வரையறை செய் துள்ளது.

இந்தியாவில் 83. 8 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கூட செலவழிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்ஜூன் சென் குப்தா குழு கூறுகிறது. அப்படியானால் இந்தியாவின் மிகப் பெருவாரியான மக்கள் மிகக் கொடிய வறு மையில் வாடுகிறார்கள் என்பதே பொருள்.

இவ்வளவு கொடிய வறுமையில் பெருவாரியான மக்கள் வாடும் இந்த தேசத்தில் தான் மிகப் பெரும் பணக்காரர் களும் பெருமுதலாளிகளும் வாழு கிறார்கள்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட விப ரங்களின்படி ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டிய லில் 52 இந்தியர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள்.

உலகளவில் முதல் 10 இடத்தை பிடித்த இந்திய பெரும் பணக்காரர்கள் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானி யும். மேற்கண்ட 52 பேரில் இடம் பெற் றுள்ள ஒரே தமிழர் கலைஞரின் பேரன் கலாநிதி மாறன்.

இந்த 52 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்தை கூட்டினால் தலை சுற்றுகிறது. 110 கோடி மக்களில் இந்த 52 பேரிடம் மட்டும் ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் கோடி செல்வம் குவிந்து கிடக்கிறது. இதை சாதாரணமான வட்டி விகிதத்தில் வங்கியில் போட்டால் கூட ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 கோடி வட்டிப் பணம் கிடைக்கும்.

இந்த வட்டிப் பணத்தை மட்டும் கொண்டு இந்தியாவில் வீடின்றி தவிக் கும் 2 கோடி விவசாயத் தொழிலாளர் களுக்கு நிரந்தரமான, வசதிகளோடு கூடிய வீடுகள் கட்டித்தர முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாடு முழுவதும் அனைத்துக் கிராமங் களில் சகல வசதிகளும் கொண்ட சுகா தார மையங்கள், தாலுகா மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் போன்றவற்றை உருவாக்கு வதற்கு ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். அரசு அதற்கு பணமில்லை என்கிறது. ஆனால், இதைவிட 4 மடங்கு அதிகமான பணம் வெறும் 52 பணக்காரர் களின் கைகளில் புரளுகிறது.

ஒருபுறம் கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்: மறு புறம் செல்வத்தில் புரளும் சில பெருமுதலாளிகள். இதுவே இன் றைய இந்தியா. 63 ஆண்டுகால சுதந் திரத்திற்குப் பின்னும் நீடிக்கும் இந்தியா.

இந்த நிலையை மாற்ற அடிப்படை யான சமூக மாற்றம் அவசியம். சமூக மாற்றத்திற்கான போராட்டம் என்பது வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட் டம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், பாலின ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் உள் ளடக்கிய ஒரு மகத்தான போர். இந்தப் போரின் இறுதி இலக்கு, மாணவர் சங்கத் தின் வெண் பதாகையில் பொறித்திருக் கிற சோஷலிசம் எனும் முழக்கம்.

இவ்வாறு வி.கே.ராமச்சந்திரன் பேசினார்.

அவரது உரையை எஸ். நூர்முகமது தமிழாக்கம் செய்தார்.


Friday, April 16, 2010

போலிமருந்து: உறுதியான நடவடிக்கை தேவை

தமிழகத்தில் காலாவதியான மருந்துகள் மறு சுழற்சி செய்யப்பட்டதும், விற்பனையில் முன்னணியில் இருக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்யப் பட்டு வருவதையும், கடந்த இரண்டு வாரங் களாக கண்டு வருகின்றோம்.

இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங் களில் மருந்து கடைகளிலும், விசாரணை (ஆய்வு) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் குப்பைகளில் காலாவதியான மருந் துகள் கண்டெடுப்பு, குப்பையில் மூட்டை மூட்டையாக போலி மருந்துகள் கொட்டப்பட் டிருந்தன என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இப்போது பூதாகரமாக விஷயம் கிளம்பி யிருப்பதால், இந்த பெரும் மோசடியில் தொடர்புடையவர்கள், நீதி விசாரணை என் றும், ஒட்டு மொத்தமாக இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமெனவும் என பல தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட் டுள்ளது.

சிறு பொறி பெரும் நெருப்பாய் மாறும் என்பதைப் போல், எங்கோ துவங்கி எப்படி யோ சென்று கொண்டிருக்கின்றது. இதையே சாதகமாக பயன்படுத்த பல பேர் முயன்று வருகின்றனர். சென்னையை மையமாக வைத்து காலாவதியான மருந்துகளை மறு சுழற்சி முறையில் விற்பனை செய்ததில் ஈடு பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நபர் கள், கடந்த பல ஆண்டுகளாக மருந்து துறை யில் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள். இப் படிப்பட்ட மருந்துகளை விற்பதற்கென்றே 250 பிரதிநிதிகளை மாநிலம் முழுவதும் பணி யில் அமர்த்தியுள்ளனர். இதற்கென விசேஷ கிட்டங்கி/விற்பனை மையம் அமைத்துள்ள னர். இந்த விற்பனை ஏதோ ஓரிரு நாட்களாக நடந்தது அல்ல. திட்டமிட்ட முறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட நடவடிக்கை. ஆனால் ஏதோ புதிதாக நடந்தது போல் அர சின் நடவடிக்கைகள் தெரிகின்றது. அதில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவர் ஏற்கெ னவே இரண்டு முறை கைது செய்யப்பட்டவர். முன்னர் கைது செய்யப்பட்டது போராட்டம் நடத்தியதற்காக அல்ல. மருந்து விற்பனை யில் செய்த குற்றத்திற்காகத்தான். அப்படிப் பட்டவர் மீது கண்காணிப்பே இல்லை. புதிதாக தொழில் (அ) நிறுவனம் துவங்கும் போது லைசென்ஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப் படும் போது, என்ன விற்பனை செய்யப் போகிறார்கள் என்பதை அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ததா? செய்யத் தவறியுள் ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மறு சுழற்சியில் சிக்கியுள்ள பல மருந்துகள், முன் னணி நிறுவனங்களின் வேகமாக விற்பனை யாகும். அதாவது மருத்துவர்களால் அதிக மாக எழுதப்பட்ட மருந்துகள். இது போன்ற மருந்துகள் காலாவதியாக வாய்ப்பே இல் லை. எப்படி இது நடந்தது என்று அரசு தான் விளக்க வேண்டும்.

மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப் பட்ட அனைத்து பொருட்களுக்கும் காப்பீடு செய்வது நடைமுறை. அதன்படி மருந்துகள் காலாவதியாகும் போது, மாசுக் கட்டுப்பாடு மற் றும் சுற்றுச்சூழல் துறைகளின் முன் அனுமதி பெற்று, அவர்கள் முன்னிலையில் காப்பீட்டுத் துறை ஆய்வாளர்கள் மத்தியில் அழிக்கப் படும். இந்த நடைமுறை பின்பற்றப்படுகின் றதா என்பது மிகப் பெரிய கேள்வி!

அப்படியென்றால் காலாவதியான மருந் துகள் எப்படி அழிக்கப்படுகின்றன என்பதை சுகாதாரத் துறையும் கண்டு கொள்ளவே யில்லை. என்ன செய்தார்கள் என்பதையும் அத்துறைக்கான அமைச்சரும் உயர் அதி காரிகளும் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். மாறாக யாரோ குற்றவாளிகள் போல் இத்துறை அதிகாரிகள் கை நீட்டி கொண்டிருக்கிறார்கள்.

இப்படி காலாவதியான மருந்துகள் பிரச் சனைக்கு அதிகாரிகளும் காவல்துறையும் ஆய்வு செய்ய செல்லும் போது, மற்றொரு விஷயமும் கிளம்பியது. அதாவது போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை. ஏற் கெனவே விற்பனை செய்யப்படும் மருந்துக ளின் லேபிளையோ அல்லது மேல் அட்டை யையோ மாற்றி விற்பனை செய்து கொண் டிருப்பது தெரிய வந்தது.

இதுவும் இப்போது தெரிந்த விஷயமாக இருக்கவே முடியாது. அதிகாரிகளின் , அர சின் ஆசியோடு தான் இது நடந்திருக்க வேண்டும் என்பது குற்றச்சாட்டு. ஏனென் றால் பிடிபட்டது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள (அதாவது விற்றால்) போலி மருந்து. அதை மருந்து என்றே சொல்லக்கூடாது. கட லூரில் துவங்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழி யாக அது எங்கெல்லாம் சென்றது என்பதை பற்றி இப்போது விசாரணை துவங்கியுள்ளது.

பெட்டிகளில் அடுக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் சரக்குகள் என்ன என் பது பற்றி யாருக்குமே தெரியவில்லை. பாவம் அப்பாவி மக்கள். கும்பகர்ணதூக்கம் இப் போது தான் கலைந்துள்ளது. முழுவதும் கலைந்துவிட்டது என்று அறுதியிட்டு சொல்லி விட முடியாது.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

கோடி, கோடியாய் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது ஒரு புறம். உண் மையான மருந்து என நினைத்து, உட் கொண்டு உடல்நலமும், உடற்கூறின் முக் கிய பாகங்கள் பாதிக்கப்பட்டு தவித்து கொண் டிருப்பவர்கள் எண்ணற்றவர்கள். இது வெளிச்சத்திற்கு வரவில்லை.

உண்மைகளை வெளிக்கொண்டு வர விசாரணைகள் நடக்கின்றது. ஆனால் முடிவு வரும் போது அனைத்து விஷயங்களுமே காலாவதியாகி விடும் நிலை உருவாகிவிடும். விசாரணைகளின் வேகம் அப்படிப்பட்டது.

பல வழக்கு விசாரணைகளின் நிலை என்ன என்பதை நாடறியும். தவறு செய்த வன் சிரித்துக் கொண்டே நீதிமன்றங்களுக்கு செல்வதும், அரசின் நிதியும் இப்படி விரயமா வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி யாரும் இருந்து விடக் கூடாது.

இப்படி போலி மற்றும் காலாவதியான மருந்துகள் பிடிபடுவது ஒரு பக்கம் என்றால், எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக போலி டாக்டர்களும் இப்போது பிடிபடுகின்றனர்.

இவர்கள் மருத்துவம் செய்வதோ, அல் லது ஆங்கில மருந்துகள்தான் கொடுக்கின் றனர் என்பதோ இப்போது தான் தெரிந்தது போல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவர் கள் பிடிபடுவது இலவச இணைப்பு போல!

இதை விடக் பெரிய கூத்து என்னவென் றால், அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப் படும் மருந்துகளையும் தனியார் நிறுவனங் கள் தான் சப்ளை செய்கின்றன. அதெல்லாம் எந்த அளவுக்கு தரத்துடன் வருகின்றது என்பது இப்போது ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். காரணம், பொதுத்துறை நிறுவ னங்கள் இதுகாறும் மானிய விலையில் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்கி வந்தது. நமது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தால் ( கொள்கையால்) அதுவும் இன்று நின்றுவிட்டது. எது எப்படியோ, பர பரப்பு அடங்கும் முன் முழுமையான, துரித மான விசாரணை நடைபெற வேண்டும் என் பது தான் விருப்பம். அரசு தன் பணியை அந்த வழியில் செயல்படுத்திட வேண்டும். அதற்காக துப்பு கொடுத்தால் 25 லட்சம் ரூபாய் பரிசு என்று ஏதோ காணாமல் போன வர்களை தேடுகின்றவர்கள் போல், திட்டம் அறிவிப்பது எல்லாம் கண்துடைப்பு. உருப் படியான உறுதியான நடவடிக்கையைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Sunday, March 28, 2010

போலி மருந்து; பரந்த வலைப்பின்னல்

கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக இருக்கும் காலாவதியான மருந்துகள் மறுபயன்பாடு - மரணம் என, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி யுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சிறுமியின் மரணம் (சென்னை) மூலம் இந்த கொலை பாதகச் செயல் உலகுக்கு தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகி லேயே அதிக லாபம் ஈட்டித் தரும் தொழில் களில் ஒன்று, மருந்து தயாரிப்பு விற்பனை. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெரும் நிறுவனங்கள் கூட சமீப காலமாக மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங் கியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் தாராளமய - தனியார்மய கொள்கைகளாலும், மருந்து துறையில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு முடமாக்கப்பட்ட தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பு, காப்புரிமை சட்ட திருத்தம் என வேகமான நடவடிக்கைகளால் மருந்து துறை யில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் மருந் துகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இப்படி தாராளமாக கதவுகள் திறந்துவிடப் பட்டதன் ஒரு விளைவுதான், சென்னையில் நடந்திருக்கும் கோரம். இது ஒரு தனி நபரோ அல்லது சிலரால் மட்டுமே செய்யக்கூடிய காரியமல்ல. திட்டமிட்ட முறையில் மருந்துத் துறையில் பல ஆண்டுகளாக பரிச்சயம் பெற்றவர்கள்தான் இந்த மோசடியின் மூளை யாக இருந்திருக்கக்கூடும்.

சென்னையில் நடந்தது என்ன?

நமது மாநிலத்தின் தலைநகரில் உள்ள ஒரு குப்பை மேட்டில் டன் கணக்கில் மருந் துகள் (காலாவதியான) இருந்தது எனவும், அவை அங்கிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டு, கோயம்பேடு அருகில் உள்ள கிடங்கில் பிரிக் கப்பட்டு, புதியசீல் அச்சடிக்கப்பட்டு, மறு சுழற்சியில் மீண்டும் விற்பனைக்கு மருந்து கடைகளுக்கு வந்துள்ளன. இப்படி வந்ததில் பலவகை மருந்துகள் இருந்ததாகவும், உயி ருக்கு ஆபத்தான இம்மருந்துகள் உட்கொள் ளப்பட்டிருந்தால் பின் விளைவுகள் கற் பனைக்கு எட்டாதவை.

பொதுவாக எல்லா வகை மருந்துகளுக் கும் காலாவதியாகும் மாதமும் வருடமும் குறிப் பிடப்பட்டிருக்கும். அதற்கு மேல் அம்மருந் தின் தன்மை (நுககநஉவ) வலுவிழக்கும்; எதற் காக அதை பயன்படுத்துகிறோமோ அதன் கார ணம் நிறைவேறாது. இதில் ஒவ்வொரு வகை மருந்திற்கும் வெவ்வேறு குணாம்சங்கள் உண்டு. அப்படி பார்க்கையில், சிலவகை மருந்துகளை காலாவதியான பிறகு உட் கொண்டாலோ (அ) செலுத்தினாலோ (ஊசி வகைகள்) உடலின் முக்கிய பாகங்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும். இப்படி இருக் கையில், இந்த கும்பல் இதை வழிவகுக்கப் பட்ட செயல் வடிவத்தில் சந்தையில் செய் துள்ளது பெரும் கேள்விகளை எழுப்புகின்றது.

இதுமட்டுமா?

சென்னையில் நடைபெற்றுள்ள இந்த மோசடி, தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல ஆண்டுகளாக மருந்து துறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுதான் வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக இது போன்ற மோசடிகள் பல்வேறு வடிவங்களில் நடை பெற்று வருகின்றது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி அடிக் கப்பட்டது. குறிப்பாக மருத்துவ பிரதிநிதிக ளின் அகில இந்திய சம்மேளனம் (குஆசுஹஐ) ஆதாரப்பூர்வமான படங்களோடு செய்தி களை அந்த அமைப்பின் மாத இதழிலும், அரசுகளுக்கு கோரிக்கை மனுக்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் திடீரென்று விழித்துக்கொள்ளும் அரசு. சில நடவடிக்கை எடுப்பது, பின்னர் வசதியாக அதை கிடப்பில் போடுவது என் பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

காலாவதியாகும் மருந்துகளை மறுசுழற்சி யில் மீண்டும் விற்பனைக்கு விடுவதில் சில முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களே ஈடுபட்டதை நாடறியும். இது அம்பலப்பட்ட போது நிறுவனமே அதை தவறு என்று ஏற் றுக்கொண்டு, விற்பனையை தடை செய்தது. இப்படி சம்பவங்களின் வரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மருந்து துறையில் மருந்து தயாரிக்கும் நிறு வனம், நாடு முழுவதும் மொத்த விற்பனை யாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் மருந்து கடைகளுக்கு அனுப்புவதுதான் இன்று கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறையில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு, இடைத்தரகர்கள் மருந்து வணிகத் தில் ஈடுபடுவது புது சிக்கலை உருவாக்கி யுள்ளது. இவ்வாறு செயல்படும் இடைத்தரகர் கள் அதிக லாபம் வைத்து வர்த்தகத்தில் ஈடு படுவதால், மோசடிக் கும்பல்களின் எண் ணிக்கையும் அதிகரிக்க துவங்கியது. விளைவு, இன்று ஆலமரம் போல் இந்த விஷ சங்கிலித் தொடர் பரவியுள்ளது.

அரசு நடவடிக்கை

சென்னை சம்பவத்தை தொடர்ந்து முதல் வர் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் என கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அறிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அரசின் நடவடிக்கை சில வரவேற்கத்தக்கவை என்றாலும், ஒவ்வொரு விஷயத்திலும், தங்களுக்கு இதுவரையில் நடந்தது தெரியாது எனவும், இப்போது தெரிந் துவிட்டது. என்ன செய்கிறோம் பாருங்கள் என்பதை போல் தெரிகின்றது.

ஊசி முனையில் நடப்பது கூட அரசின் செவிகளுக்கு செல்லும் இக்காலத்தில், இது போன்ற மோசடிகள் தெரியாமல் இருந்தது என சொல்லிக்கொள்வது வடிகட்டியப்பொய்.

முதற்கட்டமாக, மருந்து கண்காணிப்பா ளர்களை கூடுதலாக நியமிக்கப்போகின் றோம் என்று அறிக்கை விட்டுள்ளது அரசு. 42,000 கடைகளுக்கு கூடுதலாக 420 பேரை மட் டும் நியமிப்பது பிரச்சனையை தீர்க்க உதவாது.

இரண்டாவதாக, காலாவதியான மருந்து கள் குப்பை மேட்டிற்கு எங்கிருந்து வந்தது. பொதுவாக, இப்படிப்பட்ட மருந்துகள் அழிக் கப்படவேண்டும். அப்படி செய்யப்படாமல் போனதற்கு காரணம் என்ன? எந்த கம்பெனி செய்யத்தவறியது? அழிப்பதற்கு முறையான வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா?

மூன்றாவதாக, இந்த பிரச்சனை மக்க ளின் உயிரோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு, உரிய முறையில் தண்டனை வழங்கப் படவேண்டும்.

இத்தோடு இந்தப்பிரச்சனையை முடித்து விடாமல், தமிழகம் முழுவதும் மருந்து விற் பனை மற்றும் தயாரிப்பு செய்யப்படும் இடங் களில் ஆய்வு நடத்தி தொடர்புடையவர்களை யும், தண்டனையின் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும்.

காலாவதியாகும் மருந்துகள் பட்டியல் முறையாக பராமரித்தல், அதை கண்காணிப் பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சரிபார்த்தல் என நடவடிக்கை தொடர வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழு வதும் மருந்துத்துறையில் போதிய கண்கா ணிப்பு நடவடிக்கைகள் செய்வதில்லை. உற் பத்தி மற்றும் விற்பனைக்கு துவங்கும் போது வாங்கும் அனுமதி (லைசென்ஸ்) பெற்றால் போதும் அதன் பிறகு ஆயுளுக்கும் பிரச்ச னையே இல்லை.

சட்டங்கள் காகிதத்தில் மட்டும்

மக்கள் நலனில் அக்கறையோடு மத்திய- மாநில அரசுகள் மூலம் கொண்டு வரப்படும் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படுவ தில்லை. பலவீனங்களும், ஓட்டைகளும் இருப்பதால் சட்டம் இயற்றப்பட்ட இடத்தில் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காகிதத்தில் மட்டும் காலம் காலமாக இருக் கின்றது.

இதுபோன்ற மக்களின் நல்வாழ்வு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளில் அரசின் பணியே பிரதானமானது. சட்டங்கள் ஏட்டுச்சுரக்காயாக இல்லாமல் பின்பற்றிட வேண்டுமென பிடி வாதம் அரசுக்கு இருக்க வேண்டும். இந்தியா வில் மருந்து கொள்கை என்று பல ஆண்டு களுக்கு முன் உருவாக்கப்பட்டது. அப்படி கொள்கை உருவாக்கப்படுவதற்கு கூட பெரும்போராட்டங்கள் தேவைப்பட்டது. சமூக ஆர்வலர்கள், இடதுசாரி கட்சிகள், மருத்துவர் கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள், அறிவி யல் இயக்கம் என இதற்காக உழைத்திட்ட வர்கள் பலர். அப்படி வந்த சட்டத்தை முறை யாக பின்பற்ற உரிய நடவடிக்கை வேண்டும்.

லாப வேட்டைக்காக, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஒருபுற மிருக்க, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற் படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல் அரசு செயல்படு வதை தவிர்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாப வேட்டைக்காக அப்பாவி மக்களின் உயிரை காவு கொடுக்க திட்டமிட்ட சதிக்கும் பலுக்கு அரசு, நீதி மற்றும் காவல்துறை வளைந்து கொடுக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையும் தேவைப்படுகின்றது. மருந்து என்பது ஒரு அத்தியாவசிய பொருள். அதன் பயன்பாடு, பின்விளைவு என அனைத்தும் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடி யது. அவர்களின் ஆலோசனையோடு மருந் துகளை எடுத்துக்கொள்வது, மருந்து வாங் கும்போது கவனமுடன் அனைத்து விஷயங் களையும் பார்ப்பது என சில விஷயங்களை நாமே செய்தலும் அவசியம்.

மருந்து அட்டைகளில், பாட்டில்களில் காலாவதியான வருடம்/மாதம் என இனி மேல் பெரிதாக அச்சடிக்கப்படவேண்டும். இவையனைத்தும் காலத்தின் தேவை. முறையாக அமல்படுத்தப்படுவது கட்டாயம். அப்படி செய்தால் மட்டுமே விலைமதிப்பற்ற மனித உயிர்களை, லாபவெறி பிடித்தவர் களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

என்.சிவகுரு

Saturday, February 27, 2010

இந்த நூற்றாண்டின் மகா மருத்துவ ஊழல்

எச்1என்1. இன்ப்ளூயன்சா (பன்றிக்காய்ச்சல்) தடுப்பு ஊசி யை உறுப்பினர் நாடுகளுக்கு பரிந்துரைத்த விஷயத்தில் சர்வ தேச சுகாதார கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதா? என் பதை உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்யவுள்ளதாக ஜனவரி 15ல் அறிவித்துள்ளது.

டென்மார்க் நாட்டை சேர்ந்த, ‘இன்பர்மேஷன்’ நாளிதழில், உலக சுகாதார நிறுவனத்தில் சுகாதார நிபுணர்கள் மருந்து உற் பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவ னத்தில் சம்பளம் வாங்குபவர்க ளாக உள்ளனர். இந்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளை பரிந்துரை செய் யும் நிபுணர் குழுவில், புதிய உறுப் பினராக ஜீகாரி எஸ்கோலா இடம்பெற்றுள்ளார். இந்த நிபு ணர், பின்னிஷ் இன்ஸ்டிடியூட் டில் இயக்குனராக உள்ளார்.

இந்த நிறுவனம் எச்1என்1 தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் கிளாக்சோ ஸ்மித் க்ளின் நிறுவனத்திடம் ஆராய்ச்சி மானியமாக 60லட்சம் யூரோ கரன்சியை பெற்றுள்ளது. மருந்து நிறுவனத்திடம் இருந்து மானியம் பெற்ற நிறுவன இயக்குனரான எஸ்கோலா, உலக நாடுகள், எச்1என்1 தடுப்பூசி வாங்குவதில் முனைப்பு காட்டியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பன்னாட்டு மருந்து நிறுவன தயாரிப்பை சந்தையில், கூடுத லாக விற்பனை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் துணை போகிறதா என்ற விமர்சனத்தை பல நாடுகள் எழுப்பியுள்ளன.

நிபுணர் எஸ்கோலா, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், எனது நிறுவனத் தின் தலைவருக்கும், க்ளாக்சோ ஸ்மித்கிளின் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக் களிடம் கூறவில்லை. குறிப் பிட்ட ஆய்வுக்கு, பெறப்பட்ட பணம் தொடர்புடைய ஆய்வுகுழு வில் நான் (எஸ்கோலோ) இல் லை என்றும் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் சமீப செயற்குழு கூட்டம் ஜெனீ வாவில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பங்கேற்ற இந்திய சுகா தாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ், பேசுகையில், ஸ்வைன் ப்ளூ தவறான பேரிடர் நோய் என்று, ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. பல நாடுகளில், பெரும் மக்களிடம் இந்த நோய் பரவியது உண்மையா? என கேட்டார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் பதிலளிக்கையில், அனைத்து உறுப்பினர் நாடுக ளுக்கும் எச்1என்1 பேரிடர் நோயின் உண்மையான நிலை குறித்து முறைப்படியாக கடிதம் அனுப்புவதாக தெரிவித்தது.

கடந்த ஜனவரி மாத இறுதி யில் ஐரோப்பா நாடாளுமன்ற அவைக்குழுவின் அவசர கூட் டம் பிரான்சில் நடைபெற்றது. எச்1என்1 குறித்து நிறுவனம் பிரச்சாரம் மேற்கொண்ட நிலை யில், இந்நோய்க்கான மருந்து உற் பத்தியாளர்கள் தங்களது ஆதிக் கத்தை செலுத்தினார்களா என் பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐரோப்பா நாடாளுமன்ற அவைக் குழுவின், சுகாதார பிரிவு தலைவர் வூல்ப் காங்வொடார்க், ப்ளூ பேரிடர் நோய் இந்த நூற்றாண்டின் பெரும் மருத்துவ ஊழல் என்றார். எச்1என்1 வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்திற்காக ஜி.எஸ்.கே. நிறுவனம் இந்தியாவிலும் சோத னை செய்து வருகிறது. இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் கூடு தல் மருத்துவ இயக்குனர் பிரசாத் குல்கர்னி கூறுகையில், உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் இந்த தடுப்பு மருந்து வருகிற மார்ச் மாதகாலகட்டத்தில் கிடைக்கும் என்றார்.

-எஸ்.பிரேம்குமார்

ஆதாரம் : டவுன் டூ எர்த்

Saturday, January 2, 2010

மருந்து நிறுவனங்களின் பரிசுகளை வாங்கக்கூடாது மருத்துவர்களுக்கு புதிய தடை

மருந்து நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளை வாங் கக் கூடாது என்றும், அவர் களது செலவில் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள் ளக் கூடாது என்றும் மருத் துவர்களுக்கு புதிய தடை கள் விதிக்கப்பட்டுள்ளன.


தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கி வருவ தாக தொடர்ந்து குற்றச் சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய மருத்துவக்கழகம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உத்தரவிட் டுள்ளது.

மருத்துவக்கழகத்தின் புதிய பணிவரன்முறை விதி முறைகளின்படி, இனி மேல், மருந்து நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருட்களை மருத்துவர்கள் ஏற்கக் கூடாது. மேலும் மருந்து நிறுவனங்கள் அழைத்துச் செல்லும் வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு சுற்றுலா போன்றவற்றிலும் கலந்து கொள்ளவும் கூடாது.

புதிய விதிகளின் படி, மருந்து நிறுவனங்களின் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர், அத்தகைய ஆய்வுக்காக முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அமைப்புகளிடம் இருந்து முறைப்படியாக ஒப்புதல் பெறப்பட்டுள் ளதா என்பதையும் மருத் துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளன.

மேலும் மருந்து நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை மருத்துவர்களுக்கு நேரும் போது, தனது தொழிலுக்கும், தான் பணிபுரியும் மருத் துவமனைக்கும் எந்தவித மான சீர்கேடும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.