Thursday, August 21, 2008

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் பன்னாட்டுக் கம்பெனிகள்தான்

விவசாயத் துறையில் பன்னாட்டு பெரு முதலாளித்துவ கம்பெனிகள் நடத்தும் தலையீடுகள்தான் நாட்டில் விவசா யிகள் தற்கொலை அதிகரிக்க காரண மாகும் என்று பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா கூறினார்.


‘இந்தோ-யுஎஸ் நாலேஜ் இனி சியேட்டிவ் ஆன்புட் செக்யூரிட்டி’ என்ற தலைப்பில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசினார்.

விவசாயத் துறையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு விவசாயிகளுக்கு பயனளிக்காது. பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும் ரசாயன உரம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும்தான் பயனளிக்கும். ரசாயன உரத் தயாரிப்புக் கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மானியமாக வழங்கும் அரசு ஏழை விவசாயிகளைப் புறக்கணிக்கிறது. இந்திய- அமெரிக்க ஒத்துழைப்பின் மூலம் அமெரிக்கா விரும்புவது எரிசக்தி பாதுகாப்பு அல்ல; அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பே ஆகும். அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்குப் பின்னாலும் கூட விவசாயத் துறையில் அதன் முதலீட்டு நோக்கம் மறைந்திருக்கிறது. இந்திய விவசாயத்துறையை முற்றிலுமாக பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் கொள்கையைத்தான் மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி எழவேண்டும் என்றும் வந்தனா சிவா கூறினார்.

பணவீக்க கணக்கீடு மோசடி

பணவீக்கம் என்பது பொதுவாக பொருட்களின் தேவை அதிகரிப்பதாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள்.

நமது நாட்டில் பண வீக்கத்தைக் கணிக்கும் முறையிலும் மோசடிதான் உள்ளது. பொதுவாக மொத்த விலைக் குறியீட்டெண்ணைத்தான் பணவீக்கத்திற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்கிறார்களே தவிர சில்லரை விலையை அல்ல. மொத்த விலைக்கும் சில்லரை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

நாட்டு மக்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு வருவாயில் 70 சதவிகிதம் உணவுக்கே செலவாகிறது. ஆனால் பணவீக்கத்திற்கான கணக்கில் உணவுப் பொருளை 22 சதவிகிதம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். எஞ்சிய 78 சதவீதம் ஆடம்பரப்பொருள் முதல் கட்டுமானப் பொருள் வரை அடக்கம்.

உண்மையான கணக்குப் பார்த்தால் இவர்கள் சொல்லும் 11.05 என்ற சதவிகித கணக்கு மோசடியானது. பணவீக்கம் குறைந்தது 3மடங்காவது அதிகம் இருக்கும்.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் மிகமிகக் குறைந்த விலையில் கிடைத்த பிஸ்கட் பாக்கெட் 3 ரூபாயாக இருந்தது நான்கு ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 33 சதவிகித உயர்வல்லவா! இத்தகைய உயர்வுகளை மறைத்துக் கொடுக்கப்படும் கணக்குதான் இன்றைய பணவீக்க கணக்கு.

No comments: