Wednesday, March 25, 2009

தடுப்பூசி நிறுவன விவகாரம் ஆய்வுக் குழு பரிந்துரை ஏற்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வுக் குழு வின் பரிந்துரைகளை ஏற்க மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 

தடுப்பூசி மருந்து ஆய் வக உற்பத்தி தொடர்பாக கடந்த மாதம் நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் கடிதம் எழுதியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறைக்கு 12 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் அலு வலகம் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில் கசவுளி, குன்னூர் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வக நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. 

இக்குழு தனது பரிந் துரையை மத்திய சுகாதாரத் துறையிடம் அளித்துவிட்டது. இப்பரிந்துரை அனைத்தையும் அமல் படுத்தப்படும் என கடந்த 13 ஆம் தேதியன்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. அதற்கான திட் டங்களை அனுப்பவும் கோரியுள்ளது. 

இதனிடையே மார்ச் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் குன்னூர் பாஸ்டியர் அலு வலகத்தில் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி னார்கள். 

தடுப்பூசி மருந்து தயாரிப்பு, விநியோகம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆயினும் இதுவரை தேசிய ஒருங்கிணைந்த மருந்துத் திட்டத்தில் அளிக்கப்படும் முத்தடுப்பு, காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை தடுப்பூசி உற்பத்தி ஆகியவை எந்த பொதுத்துறை நிறுவனத் திற்கும் வழங்கப்படவில் லை என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனியார்மயக் கொள்கையில் விலகாமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

No comments: