Friday, July 18, 2008

புதுவை ஆரோக்கியம்


ஆரோக்கியம் என்பது நோய் அல்லது ஊனம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. உடல், மனம் மற்றும் சமுதாய அளவில் நலமான வாழ்வைக் குறிக்கிறது. அப்படியென்றால் ஆரோக்கியத்தின் கூறுகள் சரிவிகித உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுச்சூழலின் தூய்மை, போதிய வேலை, ஓய்வு, அடிப்படை சுகாதார வசதிகள் இவை அனைத்தும் கொடுப்பது அனைவருக்கும் கிடைக்கிறதா என்று கண்காணிப்பது அரசின் கடமையாகும். இது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையும் ஆகும். சுதந்திரம் பெற்று 53 ஆண்டுகள் ஆன பின்பும் அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது வார்த்தை அளவிலும், எழுத்தளவிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புதுவையில் கடந்த பத்தாண்டுகளில் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் கவனிக்கும்போது. 1991-92 ல் 8 லட்சமாக இருந்த மக்கள் தொகை இன்று நகர்;புறத்தில் 7 லட்சமும் 291 கிராமத்தில் 4லட்சமாகவும் மொத்தம் 11 லட்சமாக உயாந்துள்ளன.


புதுவையில் அரசு மருத்துமனைகள்4ம் சமுதாய நலவழி மையங்கள்4ம் E.S.I 12ம் ஆரம்ப சுகாதார நிலையம் 39ம் துனைசுகாதாரநிலையம் 75ம் உள்ளன.
புதுவையில் ஓர் ஆண்டில் 55 லட்சம் வெளிபுற நோயாளிகளுக்கும் 1.24 லட்சம் உட்புற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.குறைந்தது1.18 கிலோமீட்டருக்கு அதிகம் 3 கிலோமீட்டருக்கு ஒரு மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. தாக அரசு அறிவித்துள்ளதும்


தேர்ந்தேடுத்த சில நோய்களின் மீது அதிக கவணம் செலுத்துவதும் கிராமங்களி;ல் இருக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளுர் மக்களின் ஆரோக்கிய தேiவைகளை புரிந்துகொள்ளாமல் செயல்படுகின்ற தொடர்கிறது.
மையங்களின் ஊழியர்கள் மேலிடத்தின் கட்டுபாடு,மற்றும் கால அட்டவணைப்படி பணிபுரிந்து அரசு பணியாளர்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.


மற்றமாநிலங்களை ஒப்பீடும்போது சில கூடுதல் வசதிகளும் கூடுதல் நிதி ஒதிக்கீடு இருந்தாலும். அதற்கேற்ற வகையில் மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்படவில்லை. ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மருந்துகள் வழங்கப்படாமல் இருப்பதும் Anti பிஒடிக் மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்த பின்பும் அதே மருந்துகள் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையான நவீன அறிவியல் மருந்துகள் கொடுக்கப்படாமல் மிக மலிவான மருந்துகளையே கொடுத்து வருகின்றனர்.

90க்கு முன்னால் புதிய மருத்துவமனைகளும் அவைகளுக்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் விரைவாக செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்பொழுது கிராமப்புற சுகாதாரத்தை முழுமையாக நிராகரிக்கும் வகையில் படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிராமப்புற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவில்லை.பராமரிப்பு பணிகளுக்காக கூடுதல் நிதியோ பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது விலைஉயர்ந்த சாதனங்கள் விரைவில் பழுதடைந்து வீணாகும் நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. தனியார் மருத்துவமனைகள் உலகத்திலே வேறு எங்கும் இல்லாத வகையில் இச்சிறிய பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகளும் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதனால் புதுவையைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

1990 களில் இருந்த மருத்துவர்களே மக்கள் தொகை வளர்ந்த பின்னும் அதிகப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தற்பொழுது இருக்கின்ற 489 மருத்துவர்களில் 106, குருப்-Cல் 200, ஊழியர்களும் குருப்-Dல் 250 ஊழியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதும்.

தற்போது பணி அமர்த்படும் மருத்துவர்கள் எல்லாம் காண்ராக்ட் முறையில் பணியஅமர்த்தப்படுவது தனியார்மையமாக்களுக்கு முதல்படி. கிராமப்புறங்களில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதும், சிறப்பு மருத்துவர்களின் திறமையை மழுங்கடிக்கும் விதமாக அவர்களுக்கு போதிய பணிகள் வழங்கப்படாமல் இருப்பதும், பணிமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் அரசியல் காரணங்களால் அதிக மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஊதியம் அரசு மருத்துவமனையை ஒப்பிடும் போது 50 மடங்கு அதிகமாக இருப்பதும் முக்கிய காரணமாகும்.
2000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இல்லாமல் தற்பொழுது 5000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலும் புதுவை மருத்துவமனைகளில் தமிழகத்தை சேர்ந்த மக்களும் பெருமளவில் வரும்போது அவர்களுக்கும் சேர்த்து மருந்து, மாத்திரைகள் அதிகரிக்கப்படாத நிலை தொடர்கிறது.

மிகச்சிறிய பகுதியான புதுவையில் 9 மருத்துவ கல்லூரிகள் உள்ள அரசு கல்லூரிகள் 3ம் தணியார் மருத்துவ கல்லூரிகள் 7ம் உள்ளன.

கேரளாவில் மொத்தம் மருத்துவ கல்லூரிகள் 6 இதில் 5 அரசு மருத்துக்கல்லூரியும்.கூட்டுறவு முறையில் 1ம் உள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை அனுமதிப்பது என்பது காசு உள்ளவர்களுக்குத் தான் மருத்துவம் என்ற உலகமயமாக்கல் கொள்கையை புதுவை அரசும் அமுல்படுத்தி வருகிறது. மேலும் இம்மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. உலகம் முழுவதும் புதிய, புதிய நோய் ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் நோய்களை நிரந்தரமாக வராமல் தடுப்பதற்கான பணியினை செய்யாமல் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்காமல் தற்காலிகமான பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதில் அரசியல் பின்னணி என்ன?


சிக்குன் குனியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை போக்க அரசு எடுக்கும் நடவடிக்கை மேலோட்டமானதாகும். கொசுக்களை ஓழிப்பதற்கான கூடுதல் மருந்துகளோ, பணியாளர்களோ நியமிக்கப்படாமல் சிக்குன் குனியா நோயால் யாரும் இறக்கவில்லை என்ற பதிலை கூறுவதற்காக மட்டுமே அரசு இருப்பதாக கருதிக் கொள்ளலாம்.


புதுவையில் மருத்துவ சேவைகளுக்காக ஒரு தனிநபருக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியானது 2004 புள்ளிவிபரப்படி 802 ரூபாய். மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறினாலும் அதன் மூலம் மக்களுக்கு முழுமையான ஆரோக்கிய வாழ்வு அளிக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.
அனைவருக்கும் ஆரோக்கிய வாழ்வு என்பது அரசின் அலட்சியத்தாலும் தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காகவும் ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறது.


இன்று இந்தியா முழுவதும் மருத்துவ செலவுக்காக மட்டுமே தங்களுடைய நிலத்தில் ஒரு பகுதியை விற்றும் தங்களுடைய சேமிப்பில் பெரும் பகுதியை இழந்தும் அதிக கடன் வாங்கி அல்லல் படுவதும் நீடிக்கச்செய்வதற்கான நடவடிக்கைகளையே மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதில் புதுவை அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் அளிப்பதிலிருந்து விலகி அரசுகள் செயல்பட ஆரம்பித்து வருவதை மக்களிடையே கொண்டுசெல்லவேண்டிய கட்டாயம் நம்முன்னே உள்ளதை நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.

No comments: