Friday, July 18, 2008

புதுவை மாநில சுகாதாரக் தேவைகள்

“அனைவருக்கும் சுகாதாரம்” என்ற இலட்சியத்தை அடைவதற்காக புதுவை மக்களாகிய நாங்கள் அனைவரும் உறுதி கொண்டுள்ளோம். இன்றைய பொருளாதார சூழலில் மக்களின் சுகாதாரம் அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக பணமுதலீட்டிற்கும் இலாபத்திற்கும் சாதகமாக உள்ள ஒரு தொழிலாக மாறிவருவதை நாங்கள் கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது. எந்த ஒரு நவீன, நாகரீகமான அரசும் அனைவருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு அடிப்படையான தரமான ஆரோக்கியத்தை உறுதிபடுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். 1978 “அல்மா ஆட்டா” வை கைவிடக்கூடாது. ஆரோக்கியம் என்பது சுகாதார வசதிகளை வழங்குவதோடு நின்றுவிடக்கூடாது. அடிப்படையான மக்கள் உரிமையாக மாற்றி அமைக்க தேவைப்படுவன:
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கதை தகுந்த அதிகாரமும். பொருளாதார வசதிகளுடன் கூடிய, உண்மையான பரவாலாக்கப்பட்ட உள்ளுர் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல். விவசாய உற்பத்தியும், பசி மற்றும் வறுமையை போக்க உறுதியுடன் கூடிய அரசமைப்பும் தேவை. அனைவருக்கும் கல்வி, தேவையான தரமான குடிநீர், வீடு மற்றும் சுகாதார வசதிகளை உறுதிபடுத்துதல் நிலையான தரமான மக்கள் வாழ்க்கை. தூய, நிலையான சுற்றுச்சூழல். அவசியமான மருந்துகளை எளிய விலையில் அளிக்கக்கூடிய மருந்து உற்பத்தி தொழில்முறை. மக்கள் தேவைகளை உணர்ந்து மக்களால் பங்கேற்;கக்கூடிய ஆரோக்கிய வாழ்வுத்திட்டம்.


புதுவை மாநில மக்கள் ஆரோக்கியம் சூழலை பொருத்த வரையில்
1.தற்போதுள்ள ஆரம்ப சுகாதார சூழலை வலுப்படுத்தும் வகையில் நகரப்பகுதிகளில், குறிப்பாக குடிசைவாழ் மக்களுக்கு அதிகமான ஆரம்பசுகாதார நிலையங்களை துவங்குதல்.
தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலைய இணைப்புகளில் பரிந்துரைகளும் மற்றும் தொடர் கண்காணிப்பிற்கான வசதிகளை ஏற்படுத்துதல்
ஆரம்ப சுகாதார நிலைய அளவிலேயே பரவும் மற்றும் பல பரவிய நோய்களை குணப்படுத்தக்கூடிய வகையில் அவற்றின் தரத்தை மேம்படுத்துதல். சர்க்கரை வியாதி, காசநோய், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களை பெரிய மருத்துவ நிலையத்திற்கு செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்துவதற்தான வசதிகளை ஏற்படுத்துல்.
ஆரோக்கியம் பேணுவதற்கு உள்ளுரிலேயே திட்டம் தீட்ட வழிவகுத்தல்பல குடும்பங்களுக்கு அநாவசியமான செலவையும் மருந்துகளையும் தவிர்க்கும் வகையில் நோய்தடுப்பு பணிக்காக சமூக ஆரோக்கி;யப் பணியாளர்களை உள்ளுரிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தக்க பயிற்சியளித்தல்.


2.அரசு பொருளாதார நிதியுதவியுடன் கூடிய, உள்ளுர் அமைப்புகள் முழுமையாக பங்கேற்க கூடிய வகையில் (பஞ்சாயத்துக்கள், கூட்டுறவு அமைப்புகள், நீர்பகிர்வு அமைப்புகள் சுகாதாரக்குழுக்கள்) ஒரு முறையான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திட்டத்தை அரசு அமுல்படுத்துவதன் மூலம் அநாவசிய செலவையும் முழுமையான அமுல்படுத்தும் முறையையும் உறுதி செய்தல்.


3.குறிப்பிட்ட மருத்துவ துறைகளில் நிபுணர்களை தயார் செய்யும் வகையில் நிலவும் இன்றைய சுகாதாரத் துறையில். அடிப்படை மருந்துகளையும் போதுமான இணை சுகாதார நபர்களைத் தயார் செய்யக்கூடிய, மனிதவள மேம்பாட்டுத்திட்டத்தை மருத்துவத்துறையில் உள்ள மருத்துவக்கல்வி, செவிலியர் பயிற்சி, இணை சுகாதார நபர்கள் ஆகியவற்றிற்கான பயிற்சி கொண்டுவருதல். மருத்துவக் கல்லூரிகளை மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய துவங்க வேண்டுமே ஒழிய தனி நபருக்கு வேலை வசதிகளை ஏற்படுத்திதர அல்ல.


4.வியாபாரமான தனியார் மருத்துவத்துறையை கட்டுப்படுத்த வேண்டும். பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உரித்தான அனைத்து கோட்பாடுகளையும் உறுதியாக கண்காணித்தல்;;: அனைத்து நிலையிலும் ஒரே கட்டணம் மற்றும் மருந்துப் பரிந்துறைகளை தொடர்ந்து கண்காணிக்கத் தனியார் துறையில் தேவை உள்ளது. தற்போது நிலவும் கமிஷன் தரும் முறையை நிறுத்த வேண்டும். மருத்துவ நிபுணர்கள் மற்றும் தகுதியுள்ள, உறுதியான நபர்களை கொண்ட தனித்த குழுக்களை கொண்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேம்படுத்துதல்.


5. அறிவியல் பூர்வமான மருந்துக் கொள்கையை உருவாக்க
அவசியமான மருந்துப் பட்டியலை அமைத்து அரசு சுகாதார நிறுவனங்களிலும் பயன்படுத்த வேண்டும்.
ஓவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் விற்கப்படும் மருந்துகளின் பட்டியலை தயாரித்து அவைகளின் முக்கயக் கூறுகளை தொகுத்து வெளியிட வேண்டும்.
மருந்து வகைகளின் மூலப்பெயர்களை தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும்.
பொதுநிலையிலிருந்து மருந்துகளைப் பற்றிய விளம்பரங்கள் மற்றும் வியாபாரம் செய்வதை கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நவீன மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்கும் வகையில் ஒரு ஒட்டு மொத்தமான சுகாதார கொள்கையை உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்


6. பரவக்கூடிய நோய்களைத் தடுக்க தகுந்த சூழல் மற்றும் சமூக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புற வளர்ப்புத்திட்டங்களை கண்காணித்து, கட்டிட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கிருமிகள் வளர்வதற்கான சூழலை தடுக்க வேண்டும்.
உள்ளுர் சமூக மக்களையும் இயக்கங்களையும் சேர்த்து நல்ல குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பாதுகாத்தல்.

நூறு சதவிகித கழிப்பறை திட்டத்தை உருவாக்கி 5 ஆண்டிற்குள் அதை அடைய முயலுதல்.
மலேரியா, காசநோய், போன்ற நோய்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், அனைத்து மருத்துவர்களும் தெரிவிக்கும் முறையை கட்டாயப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
பாலியல் நோய்கள் (AIDS) போன்றவற்றை பரவாமல் தடுக்க கல்வி, பாலியலை வியாபாரமாக்குவதை தடுத்தல், மக்களிடம் உள்ள தவறானக் கணிப்புகளை களைக்க இயக்கங்கள் நோய்த்தடுப்பு மற்றும் சீர்முறைகளை பெண்களுக்கு தகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த வேண்டும்.


7.பெண்கள் சுகாதார நலனிற்காக
சமூக மாற்றத்தில் பெண்கள், பெண் சுகாதாரம் குறித்த அறிவைப் பரப்புதல், சத்தாண உணவு மற்றும் சுகாதாரத்தில் பெண்களுக்கு எதிராக நிலவி வரும் சூழலை மாற்றுதல். பெண்கள் வேலை மற்றும் வீட்டுசூழலில் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதினால் விளையும் ஆரோக்கிய சீர்கேட்டை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல். அனைத்து துறைகளிலும் தாய், சேய் நல வசதிகளை முழுமையாக செயல்படுத்த உறுதியான கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த நடவடிக்கைகள்.
தனியாக வாழும், கைவிடப்பட்டு வாழும் விதவைப் பெண்கள் மற்றும் விபசாரத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாலியல் நோய்கள், தாய் நலம், கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை குறித்த சுகாதார வசதிகளை பெண்களுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.


8.குழந்தைகளின் சகாதார நலன் குறித்து
தகுந்த முறையான குழந்தை உரிமைக் கோட்பாடு, குழந்தை நலன் பேணுவதற்கான போதுமான நிதி ஒதுக்கு, ICDS திட்டத்தை விரிவாக்கி ஊக்குவித்தல், வேலை செய்யும் பெண்களுக்கு உதவும் முறையான குழந்தைக் காப்பீட்டு நிலையங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது இயக்கங்கள்.
குழந்தைகளின் மீது வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறையைத் தடுக்க மக்களை உள்ளடக்கிய நடவடிக்கைகள் மற்றும் தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு தகுந்த பாதுகாப்பு.
குழந்தை தொழிலாளர்களை அறவே நீக்க கல்வி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடுத்த 5 ஆண்டிற்குள் செய்து முடித்தல்.
அடுத்த 5 ஆண்டிற்குள் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள் சாகும் சதவிகிதத்தை ஐந்திற்குள் குறைக்க தேவையான சமூக சுகாதார நலப் பணியாளர் திட்டம், ஐஊனுளு திட்டம் மற்றும் பொது வினியோக முறையை பலப்படுத்தி அரசியல் விருப்பத்துடன் உறுதியுடன் செயல்பட வேண்டும்.


9.பணியிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் விளையும் நோய்களுக்கான தொழில்நுட்ப காரணிகளையும், தொழிற்சாலைகளையும், விவசாய நடவடிக்கைகளையும் கண்காணித்தல் அவசியம்.


10.மனநோய்ப்பேணுதலை உடல்-மருத்துவம் சார்ந்த முறைக்கு அப்பால் ஒட்டுமொத்தமான முறையான மருத்துவ முறையை உருவாக்குதல் மனநோய்களை முன்னரே அறிந்து கட்டுபடுத்தும் நுட்ப சுகாதார நிலையங்களை ஆயத்தம் செய்து சமூகத்தில் விழிப்புணர்வு கொண்டு வரத் தகுந்த நடவடிக்கைகள்.


11.வயதானவர்களின் சுகாதாரம் பேண பொருளாதாரப் பாதுகாப்பு தகுந்த வேலை வாய்ப்புகள் மற்றும் அவசியமான தங்குமிடங்களை உருவாக்குதல்.


12. மனரீதியாக மற்றும் உடல்ரீதியாக ஊனமுற்றவர்களின் ஆக்கபூர்வமானத் தன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை சமூகத்தில் சாதாரணமான மனிதர்களாக வாழ வகை செய்ய கல்வி, வேலை மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் தனிச் சிறப்பான முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு நல்வாழ்வு அளித்தல்.

No comments: