Saturday, June 6, 2009

பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அறிவியல் மோசடிகளும்

அணு ஆயுதங்கள், போதை மருந்து விற்பனைக்குப் பின் கொள்ளை லாபம் அளிக்கும் துறையாக மருந்து வியாபாரம் உள்ளது. மருந்து வியாபாரத்தில் உலகம் முழுவதுமே மருந்து சந்தையை பிடிப்ப தற்கு கடும்போட்டி நிலவி வருகிறது, வியாபார சந்தையை பிடிக்கும் ஒரே நோக் கத்தில் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் போக்கை கைவிட்டு மக்களின் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் உயிரோடு விளையாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஒரு மருந்தினை சந்தையில் அறி முகப்படுத்தி விற்பனை செய்வதற்கு முன் அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த மருந்து ஏற் படுத்தும் விளைவுகள், பக்க விளைவுகள், அது எந்தளவுக்கு உடலுக்கு பாதுகாப் பானது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப் பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனங் களிடமிருந்து அத்தாட்சி பெறுவது அவசி யம் என்று நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்கள் கூறுகிறது. இந்த அறிவியல் ரீதியான அத்தாட்சி பெற மருந்து கம்பெனி கள் மருத்துவ நிபுணர்களையும், மருத்துவ பத்திரிகை ஆசிரியர்களையும் அணுகி அவர்களின் உதவியை பெறுவது உண்டு. சட்டத்திட்டங்களை காற்றில் பறக்க விட்டு “வேலியே பயிரை மேய்ந்த கதை யாக’ நடந்த பெரும் அறிவியல் மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் பின்னணியில் உலக அளவில் அறிவியல் மோசடி செய்த பன்னாட்டு நிறுவனங் களின் லாபவேட்கை குறித்தும் நியாய மற்ற போக்கு குறித்தும் ‘தி ஹிண்டு’ ஏடு அண்மையில் தலையங்கம் தீட்டியிருந்தது.

மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளி விவ ரங்களை திரித்து கூறி சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி பற்றிய விவரமும், வெளியிட்ட மருத்துவ பத்திரிகையின் பெரும் மோச டியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள மாஸ்சூட்செட்ஸ் (ஆயளளயஉாரளநவவள) என்னும் பகுதியில் ஸ்பினிங் பீல்டு(ளுயீinniபே குநைடன) என்னும் இடத்தில் அமைந்துள்ள பேஸடேட் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் ஸ்காட் எஸ் ரீபென் என்ற பிரபல மருத்துவர் மருந்து ஆராய்ச்சி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு மருந்து கம்பெனி பைசர் (ஞகணைநச) நிறுவனம் தயாரித்த ஸ்டிராய்டு அல்லா வலி நிவாரண மருந்தான செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) வலி நிவாரணி மருந்தின் பரி சோதனை மற்றும் ஆராய்ச்சியில் தவ றான புள்ளி விவரங்களை அளித்து மோச டியில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளாகியுள் ளார். டாக்டர் ரீபென் 1996லிருந்து 2008ம் வருடம் வரை 12 வருடங்களாக மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமர்ப் பிக்கப்பட்ட 72 ஆய்வு அறிக்கையில் 21 ஆய்வு அறிக்கை, தவறான மற்றும் திரித்து கூறப்பட்ட புள்ளி விவரங்களை கொண் டுள்ளது ஆகும். இத்தகைய ஆராய்ச்சி யில், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் சார்ந்த அமைப்பு மற்றும் மருத்துவ பத்திரிகை ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய செயல் அறுவை சிகிச்கைக்குப்பின் அளிக்கப்படும் வலி நிவாரண மருந்தின் ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் மூடநோக்கி யல் (டீசவாடியீயநனiஉள) மருத்துவ துறையில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரீபென் அளித்த செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) உடன் இணைந்து மற்றொரு வலி நிவாரணி மருந்தினை அறுவை சிகிச் சைக்கு நோயாளிகளுக்கு பரிந்துரை செய் யப்படும் புதியமுறை நடைமுறைக்கு வந் தது. இதனை மல்டிமாடல் அனல்சஸிக் புரோடோகால் (ஆரடவi ஆடினநட யயேடநளநளiஉ யீசடிவடிஉடிட) என்பர். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக காலப்போக்கில் அறு வைசிகிச்சை நோயாளிக்கு பரிந்துரைக் கப்படும் அளவுக்கு பெரும் முக்கியத் துவம் பெற்றது. “டாக்டர். ரீபென் நடத்தி யுள்ள மோசடி தற்போது வெளிவந்த கார ணத்தால் மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தையும், ஆராய்ச்சிக்கு பாதிப்பும் ஏற்படுத்தியுள்ளது” என்று அனஸ்தீஸீயா அனல்ஜிசியா பத்திரிகை தலைமை ஆசிரியர் ஸ்டில் ஷாபெர் கருத்து தெரி வித்துள்ளார்.

பன்னாட்டு மருந்து கம்பெனி மெர்க் (ஆநசஉம) தயாரித்து விற்பனை செய்த ‘வயாக்ஸ்’ என்ற வலிநிவாரணி மருந்து (சூடிn ளுவநசடினையட யவேi iகேடயஅஅயவடிசல னசரப) இதய நோய் சம்பந்தமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதன் காரணமாக ‘வயாக்ஸ்’ மருந்து சந்தையிலிருந்து 5 வருடங்க ளுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. மருந்து சந்தையிலிருந்து திரும்பப் பெறப் பட்டாலும் அது ஏற்படுத்திய சர்ச்சை ‘மெர்க்’ நிறுவனத்தை விட்டபாடில்லை. அண்மையில் மெர்க் நிறுவனம் நடத்திய அறிவியல் மோசடி வெளிச்சத்துக்கு வந் துள்ளது. இந்நிறுவனம் நடத்திய அறி வியல் மோசடி என்னவென்றால் தன் மருந்தின் வியாபார விற்பனைக்காக அறி வியல் நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை ஒன்றை இந்த நிறுவனமே அதை போலவே போலியாக வெளியிட் டுள்ளது என்பதே ஆகும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துதான், இது அசல் அல்ல; போலி என்பதை கண்டுபிடித்தார்.

வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்நிறுவனம் தனக்கு எதிராக திரும்பிய பிரச்சனைக்குரிய மருத்து வர்களை எவ்வாறு கவனித்தது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத்துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவ னித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர் களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத் தின்படி ‘தி கார்டியன்’ செய்தித்தாள் வெளி யிட்டுள்ள விஷயமாகும். அந்த செய்தித் தாள் கூற்றுப்படி வியாக்ஸ் மருந்து சாப்பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்த மான கோளாறு ஏற்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நோயாளிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த அமைச்சர்களையே கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவர்களை ‘பல்டி’ அடிக்க வைத்த மெர்க் நிறுவனத்தின் செல்வாக்கு ஆகும்.

இந்திய நாட்டிலும் சன்பார்மா போன்ற மருந்து கம்பெனிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் லிட்ரஸோல் என்ற கடும் பக்க விளைவுகள் உள்ள கேன்சர் நோய்க்கு உண்டான மருந்தினை மகப்பேறு மருத்துவத்தில் பரிந்துரை செய்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியல் அமைப்புகள், தொழிற்சங்கங் கள், அறிவியல் அறிஞர்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய எதிர்ப்பு இயக்கம் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.

-ஆர்.கண்ணன் ஆதாரம் : தி இந்து (மார்ச் 26, மே 20)

1 comment:

Muruganandan M.K. said...

நல்ல பதிவு