Thursday, June 11, 2009

தடைசெய்யப்பட்ட மருந்து டில்லியில் அமோக விற்பனை

பன்றிக் காய்ச்சல் நோய்க் கான தமிப்ளூ என்னும் மருந்து தடை செய்யப்பட் டிருந்த நிலையிலும், நாட்டின் தலைநகரில் அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுகிறது.

எச்1என்1 என்னும் வைரஸ் கிருமியால் தோன்றும் பன்றிக் காய்ச்சல் நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தியாவிலும் சிலருக்கு இந்நோய் தாக்கி யிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்நோய்க்கான மருந்தாக கருதப்படும் தமிப்ளூ இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் புதுடில்லியில் உள்ள பிரபல மருந்துக் கடைகளில் இம்மருந்து கூடுதல் விலைக்கு விற்கப் படுகிறது.

கன்னாட்பிளேஸ் பகுதி யில் உள்ள ஒரு மருந்துக் கடையில் 10 மாத்திரைகள் மூவாயிரம் ரூபாய்க்கு விற் பனை செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிப்ளூ மருந்து குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரான பிர்சிங் கூறு கையில், எச்1என்1 வைரஸ்க் கான ஒரே மருந்து தமிப்ளூ தான். பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் இம்மருந்து இலவச மாகவே வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை தவிர பிற மருத்துவமனையிலோ, மருந்துக் கடைகளிலோ இம்மருந்து விற்பனை செய் வது தடை செய்யப்பட்டுள் ளது என்று தெரிவித்தார். மருத்துவரின் முறையான ஆலோசனை இல்லாமல், தமிப்ளூ மருந்தை பயன் படுத்துவது பயனளிக்காது என்று தெரிவித்துள்ள அவர், அது ஆபத்தையும் உருவாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

டில்லியைச் சேர்ந்த இரு வருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதை அடுத்து, தமிப்ளு மருந்துக் கான தேவை அதிகரித்துள் ளதாக மருந்து விற்பனையா ளர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துக் கடைகளுக்கு தொலைபேசி மூலம் விசா ரணை செய்யும் பொதுமக் கள், தமிப்ளூ மருந்து கிடைப் பது குறித்து விசாரணை செய்கின்றனர். குறிப்பாக பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ள வெளிநாடு களுக்கு பயணம் செய்ய உள்ளவர்கள் அதிகளவில் இவ்விசாரணை செய்கின் றனர் என்றும் மருந்து விற் பனையாளர்கள் கூறுகின் றனர்.

இதனையடுத்து அம் மருந்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தாக இருந்தாலும், 10 மாத்திரை கள் கொண்ட இம்மருந்து ரூ.2 ஆயிரத்து 800 முதல் ரூ.4 ஆயிரத்து 800 வரை பல் வேறு மருந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன

No comments: