Saturday, January 2, 2010

மருந்து நிறுவனங்களின் பரிசுகளை வாங்கக்கூடாது மருத்துவர்களுக்கு புதிய தடை

மருந்து நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளை வாங் கக் கூடாது என்றும், அவர் களது செலவில் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள் ளக் கூடாது என்றும் மருத் துவர்களுக்கு புதிய தடை கள் விதிக்கப்பட்டுள்ளன.


தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களைச் சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கி வருவ தாக தொடர்ந்து குற்றச் சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது இந்திய மருத்துவக்கழகம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உத்தரவிட் டுள்ளது.

மருத்துவக்கழகத்தின் புதிய பணிவரன்முறை விதி முறைகளின்படி, இனி மேல், மருந்து நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருட்களை மருத்துவர்கள் ஏற்கக் கூடாது. மேலும் மருந்து நிறுவனங்கள் அழைத்துச் செல்லும் வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு சுற்றுலா போன்றவற்றிலும் கலந்து கொள்ளவும் கூடாது.

புதிய விதிகளின் படி, மருந்து நிறுவனங்களின் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர், அத்தகைய ஆய்வுக்காக முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அமைப்புகளிடம் இருந்து முறைப்படியாக ஒப்புதல் பெறப்பட்டுள் ளதா என்பதையும் மருத் துவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளில் கூறப்பட் டுள்ளன.

மேலும் மருந்து நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை மருத்துவர்களுக்கு நேரும் போது, தனது தொழிலுக்கும், தான் பணிபுரியும் மருத் துவமனைக்கும் எந்தவித மான சீர்கேடும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

No comments: