Saturday, February 27, 2010

இந்த நூற்றாண்டின் மகா மருத்துவ ஊழல்

எச்1என்1. இன்ப்ளூயன்சா (பன்றிக்காய்ச்சல்) தடுப்பு ஊசி யை உறுப்பினர் நாடுகளுக்கு பரிந்துரைத்த விஷயத்தில் சர்வ தேச சுகாதார கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதா? என் பதை உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்யவுள்ளதாக ஜனவரி 15ல் அறிவித்துள்ளது.

டென்மார்க் நாட்டை சேர்ந்த, ‘இன்பர்மேஷன்’ நாளிதழில், உலக சுகாதார நிறுவனத்தில் சுகாதார நிபுணர்கள் மருந்து உற் பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவ னத்தில் சம்பளம் வாங்குபவர்க ளாக உள்ளனர். இந்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளை பரிந்துரை செய் யும் நிபுணர் குழுவில், புதிய உறுப் பினராக ஜீகாரி எஸ்கோலா இடம்பெற்றுள்ளார். இந்த நிபு ணர், பின்னிஷ் இன்ஸ்டிடியூட் டில் இயக்குனராக உள்ளார்.

இந்த நிறுவனம் எச்1என்1 தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் கிளாக்சோ ஸ்மித் க்ளின் நிறுவனத்திடம் ஆராய்ச்சி மானியமாக 60லட்சம் யூரோ கரன்சியை பெற்றுள்ளது. மருந்து நிறுவனத்திடம் இருந்து மானியம் பெற்ற நிறுவன இயக்குனரான எஸ்கோலா, உலக நாடுகள், எச்1என்1 தடுப்பூசி வாங்குவதில் முனைப்பு காட்டியுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பன்னாட்டு மருந்து நிறுவன தயாரிப்பை சந்தையில், கூடுத லாக விற்பனை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் துணை போகிறதா என்ற விமர்சனத்தை பல நாடுகள் எழுப்பியுள்ளன.

நிபுணர் எஸ்கோலா, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், எனது நிறுவனத் தின் தலைவருக்கும், க்ளாக்சோ ஸ்மித்கிளின் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக் களிடம் கூறவில்லை. குறிப் பிட்ட ஆய்வுக்கு, பெறப்பட்ட பணம் தொடர்புடைய ஆய்வுகுழு வில் நான் (எஸ்கோலோ) இல் லை என்றும் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் சமீப செயற்குழு கூட்டம் ஜெனீ வாவில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பங்கேற்ற இந்திய சுகா தாரத்துறை செயலாளர் சுஜாதா ராவ், பேசுகையில், ஸ்வைன் ப்ளூ தவறான பேரிடர் நோய் என்று, ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. பல நாடுகளில், பெரும் மக்களிடம் இந்த நோய் பரவியது உண்மையா? என கேட்டார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் பதிலளிக்கையில், அனைத்து உறுப்பினர் நாடுக ளுக்கும் எச்1என்1 பேரிடர் நோயின் உண்மையான நிலை குறித்து முறைப்படியாக கடிதம் அனுப்புவதாக தெரிவித்தது.

கடந்த ஜனவரி மாத இறுதி யில் ஐரோப்பா நாடாளுமன்ற அவைக்குழுவின் அவசர கூட் டம் பிரான்சில் நடைபெற்றது. எச்1என்1 குறித்து நிறுவனம் பிரச்சாரம் மேற்கொண்ட நிலை யில், இந்நோய்க்கான மருந்து உற் பத்தியாளர்கள் தங்களது ஆதிக் கத்தை செலுத்தினார்களா என் பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐரோப்பா நாடாளுமன்ற அவைக் குழுவின், சுகாதார பிரிவு தலைவர் வூல்ப் காங்வொடார்க், ப்ளூ பேரிடர் நோய் இந்த நூற்றாண்டின் பெரும் மருத்துவ ஊழல் என்றார். எச்1என்1 வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்திற்காக ஜி.எஸ்.கே. நிறுவனம் இந்தியாவிலும் சோத னை செய்து வருகிறது. இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் கூடு தல் மருத்துவ இயக்குனர் பிரசாத் குல்கர்னி கூறுகையில், உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் இந்த தடுப்பு மருந்து வருகிற மார்ச் மாதகாலகட்டத்தில் கிடைக்கும் என்றார்.

-எஸ்.பிரேம்குமார்

ஆதாரம் : டவுன் டூ எர்த்

No comments: