அணு ஆயுதங்கள், போதை மருந்து விற்பனைக்குப் பின் கொள்ளை லாபம் அளிக்கும் துறையாக மருந்து வியாபாரம் உள்ளது. மருந்து வியாபாரத்தில் உலகம் முழுவதுமே மருந்து சந்தையை பிடிப்ப தற்கு கடும்போட்டி நிலவி வருகிறது, வியாபார சந்தையை பிடிக்கும் ஒரே நோக் கத்தில் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் போக்கை கைவிட்டு மக்களின் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் உயிரோடு விளையாடும் போக்கு அதிகரித்து வருகிறது.
ஒரு மருந்தினை சந்தையில் அறி முகப்படுத்தி விற்பனை செய்வதற்கு முன் அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த மருந்து ஏற் படுத்தும் விளைவுகள், பக்க விளைவுகள், அது எந்தளவுக்கு உடலுக்கு பாதுகாப் பானது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப் பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனங் களிடமிருந்து அத்தாட்சி பெறுவது அவசி யம் என்று நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்கள் கூறுகிறது. இந்த அறிவியல் ரீதியான அத்தாட்சி பெற மருந்து கம்பெனி கள் மருத்துவ நிபுணர்களையும், மருத்துவ பத்திரிகை ஆசிரியர்களையும் அணுகி அவர்களின் உதவியை பெறுவது உண்டு. சட்டத்திட்டங்களை காற்றில் பறக்க விட்டு “வேலியே பயிரை மேய்ந்த கதை யாக’ நடந்த பெரும் அறிவியல் மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் பின்னணியில் உலக அளவில் அறிவியல் மோசடி செய்த பன்னாட்டு நிறுவனங் களின் லாபவேட்கை குறித்தும் நியாய மற்ற போக்கு குறித்தும் ‘தி ஹிண்டு’ ஏடு அண்மையில் தலையங்கம் தீட்டியிருந்தது.
மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளி விவ ரங்களை திரித்து கூறி சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி பற்றிய விவரமும், வெளியிட்ட மருத்துவ பத்திரிகையின் பெரும் மோச டியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள மாஸ்சூட்செட்ஸ் (ஆயளளயஉாரளநவவள) என்னும் பகுதியில் ஸ்பினிங் பீல்டு(ளுயீinniபே குநைடன) என்னும் இடத்தில் அமைந்துள்ள பேஸடேட் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் ஸ்காட் எஸ் ரீபென் என்ற பிரபல மருத்துவர் மருந்து ஆராய்ச்சி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு மருந்து கம்பெனி பைசர் (ஞகணைநச) நிறுவனம் தயாரித்த ஸ்டிராய்டு அல்லா வலி நிவாரண மருந்தான செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) வலி நிவாரணி மருந்தின் பரி சோதனை மற்றும் ஆராய்ச்சியில் தவ றான புள்ளி விவரங்களை அளித்து மோச டியில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளாகியுள் ளார். டாக்டர் ரீபென் 1996லிருந்து 2008ம் வருடம் வரை 12 வருடங்களாக மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமர்ப் பிக்கப்பட்ட 72 ஆய்வு அறிக்கையில் 21 ஆய்வு அறிக்கை, தவறான மற்றும் திரித்து கூறப்பட்ட புள்ளி விவரங்களை கொண் டுள்ளது ஆகும். இத்தகைய ஆராய்ச்சி யில், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் சார்ந்த அமைப்பு மற்றும் மருத்துவ பத்திரிகை ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய செயல் அறுவை சிகிச்கைக்குப்பின் அளிக்கப்படும் வலி நிவாரண மருந்தின் ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் மூடநோக்கி யல் (டீசவாடியீயநனiஉள) மருத்துவ துறையில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ரீபென் அளித்த செலிகாப்சிக் (ஊநடநஉடிஒib) உடன் இணைந்து மற்றொரு வலி நிவாரணி மருந்தினை அறுவை சிகிச் சைக்கு நோயாளிகளுக்கு பரிந்துரை செய் யப்படும் புதியமுறை நடைமுறைக்கு வந் தது. இதனை மல்டிமாடல் அனல்சஸிக் புரோடோகால் (ஆரடவi ஆடினநட யயேடநளநளiஉ யீசடிவடிஉடிட) என்பர். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக காலப்போக்கில் அறு வைசிகிச்சை நோயாளிக்கு பரிந்துரைக் கப்படும் அளவுக்கு பெரும் முக்கியத் துவம் பெற்றது. “டாக்டர். ரீபென் நடத்தி யுள்ள மோசடி தற்போது வெளிவந்த கார ணத்தால் மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தையும், ஆராய்ச்சிக்கு பாதிப்பும் ஏற்படுத்தியுள்ளது” என்று அனஸ்தீஸீயா அனல்ஜிசியா பத்திரிகை தலைமை ஆசிரியர் ஸ்டில் ஷாபெர் கருத்து தெரி வித்துள்ளார்.
பன்னாட்டு மருந்து கம்பெனி மெர்க் (ஆநசஉம) தயாரித்து விற்பனை செய்த ‘வயாக்ஸ்’ என்ற வலிநிவாரணி மருந்து (சூடிn ளுவநசடினையட யவேi iகேடயஅஅயவடிசல னசரப) இதய நோய் சம்பந்தமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதன் காரணமாக ‘வயாக்ஸ்’ மருந்து சந்தையிலிருந்து 5 வருடங்க ளுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. மருந்து சந்தையிலிருந்து திரும்பப் பெறப் பட்டாலும் அது ஏற்படுத்திய சர்ச்சை ‘மெர்க்’ நிறுவனத்தை விட்டபாடில்லை. அண்மையில் மெர்க் நிறுவனம் நடத்திய அறிவியல் மோசடி வெளிச்சத்துக்கு வந் துள்ளது. இந்நிறுவனம் நடத்திய அறி வியல் மோசடி என்னவென்றால் தன் மருந்தின் வியாபார விற்பனைக்காக அறி வியல் நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை ஒன்றை இந்த நிறுவனமே அதை போலவே போலியாக வெளியிட் டுள்ளது என்பதே ஆகும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துதான், இது அசல் அல்ல; போலி என்பதை கண்டுபிடித்தார்.
வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்நிறுவனம் தனக்கு எதிராக திரும்பிய பிரச்சனைக்குரிய மருத்து வர்களை எவ்வாறு கவனித்தது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத்துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவ னித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர் களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது.
இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத் தின்படி ‘தி கார்டியன்’ செய்தித்தாள் வெளி யிட்டுள்ள விஷயமாகும். அந்த செய்தித் தாள் கூற்றுப்படி வியாக்ஸ் மருந்து சாப்பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்த மான கோளாறு ஏற்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நோயாளிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த அமைச்சர்களையே கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவர்களை ‘பல்டி’ அடிக்க வைத்த மெர்க் நிறுவனத்தின் செல்வாக்கு ஆகும்.
இந்திய நாட்டிலும் சன்பார்மா போன்ற மருந்து கம்பெனிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் லிட்ரஸோல் என்ற கடும் பக்க விளைவுகள் உள்ள கேன்சர் நோய்க்கு உண்டான மருந்தினை மகப்பேறு மருத்துவத்தில் பரிந்துரை செய்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியல் அமைப்புகள், தொழிற்சங்கங் கள், அறிவியல் அறிஞர்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய எதிர்ப்பு இயக்கம் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.
-ஆர்.கண்ணன் ஆதாரம் : தி இந்து (மார்ச் 26, மே 20)
Saturday, June 6, 2009
பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அறிவியல் மோசடிகளும்
Thursday, April 9, 2009
மனித நேயம் கொண்ட சுகாதார சேவை
Wednesday, March 25, 2009
தடுப்பூசி நிறுவன விவகாரம் ஆய்வுக் குழு பரிந்துரை ஏற்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்
தடுப்பூசி மருந்து ஆய் வக உற்பத்தி தொடர்பாக கடந்த மாதம் நாடாளு மன்ற நிலைக்குழுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறைக்கு 12 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பிரதமர் அலு வலகம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் கசவுளி, குன்னூர் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வக நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு தனது பரிந் துரையை மத்திய சுகாதாரத் துறையிடம் அளித்துவிட்டது. இப்பரிந்துரை அனைத்தையும் அமல் படுத்தப்படும் என கடந்த 13 ஆம் தேதியன்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. அதற்கான திட் டங்களை அனுப்பவும் கோரியுள்ளது.
இதனிடையே மார்ச் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் குன்னூர் பாஸ்டியர் அலு வலகத்தில் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி னார்கள்.
தடுப்பூசி மருந்து தயாரிப்பு, விநியோகம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆயினும் இதுவரை தேசிய ஒருங்கிணைந்த மருந்துத் திட்டத்தில் அளிக்கப்படும் முத்தடுப்பு, காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை தடுப்பூசி உற்பத்தி ஆகியவை எந்த பொதுத்துறை நிறுவனத் திற்கும் வழங்கப்படவில் லை என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனியார்மயக் கொள்கையில் விலகாமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Monday, March 16, 2009
கிண்டி, குன்னூர், கசௌலியில் மீண்டும் நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
கிண்டி பிசிஜி, குன்னூர் பாஸ்டியர், கசௌலி மத்திய ஆராய்ச்சி கழகம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களிலும் மீண்டும் நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இவ்வியக்கத்தின் சார் பில் “நாடு தழுவிய நோய் தடுப்பு திட்டத்தைக் காப்போம்” என்ற தலைப்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், இந்தியாவில் வருடத்திற்கு பிறக்கும் 2.6கோடி குழந் தைகளுக்கு பாதுகாப்பு கேடயமாக நாடு தழுவிய நோய்த் தடுப்புத் திட்டம் உள்ளது. நோய்த் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து (2008ஜன15) பிறப்பிக்கப்பட்ட உத்தர வை திரும்பப் பெற வேண்டும்.
இந்நிறுவனங்களில் பிசிஜி, டிபிடி, டிடி அண்டு டிடி ஆகிய மருந்துகளின் உற்பத்தியை உடனடியாக துவக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி இந் நிறுவனங்களை மேம் படுத்த உரிய நடவடிக்கை களை போர்க்கால அடிப் படையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவை யான நிதியை வழங்கி, நிபு ணர்களையும், ஆட்களை யும் நியமனம் செய்ய வேண்டும்.
இளம்பிள்ளை வாதம், தட்டம்மை தடுப்பு மருந்து நாடு தழுவிய நோய்தடுப்பு திட்டத்தின் ஒரு அங்கம். இத்தடுப்பு மருந்துகளையும் மேற்கண்ட நிறுவனங்க ளில் உற்பத்தி செய்ய வேண் டும் என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
டி.கே.ரங்கராஜன் எம்பி
இக்கருத்தரங்கில் பேசிய டி.கே.ரங்கராஜன் எம்பி, இந்த மூன்று நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங் களையும் மூடக்கூடாது என்று பிரதமரிடம் மனுக் கொடுத்தேன். அதனடிப் படையில் சுகாதார அமைச் சகத்திடம் 13 கேள்விகளை பிரதமர் கேட்டார். பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு இப்பிரச்சனை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து குன்னூரில் நிலைக்குழு ஆய்வு செய்துள்ளது என் றார்.
தனியார், மருத்துவத் திற்கு 6சதவீதம் செலவிடு தையும், அரசு ஒரு சதவீதம் செலவிடுதையும் குறிப் பிட்ட அவர், சாதாரண மனிதர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக உள்ளது என்று 11வது ஐந்தாண்டு திட்டம் ஒப்புக் கொண் டுள்ளதையும் சுட்டிக்காட் டினார்.
கிண்டி பிசிஜி லேப் துவங்கப்பட்டபோது, அதனை எதிர்த்து ராஜாஜி பெரும் போராட்டம் நடத் தினார். ஆனால், அவர் தோல்வியடைந்தார். தற் போதுள்ள மத்திய அமைச் சர் ராஜாஜியின் கனவை நிறைவேற்றியுள்ளார். எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிக்கும் பிரச் சனையில் மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ரங்கராஜன் கேட்டுக் கொண்டார்.
கே.மலைச்சாமி எம்பி
இந்திய மக்கள் நல அரசு என்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற கொள்கைக்கு மாறாகவும் மத்திய அரசு இந்த பொதுத் துறை நிறுவனங்களை மூடியுள்ளது என்று கூறிய அதிமுக மாநிலங்களவை கொறடா கே.மலைச்சாமி, அரசை நிர்பந்தப்படுத்தும் வகையில் நமது போராட் டம் அமைய வேண்டும் என்றார்.
டாக்டர் சி.ச.ரெக்ஸ் சற்குணம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங் கில் டாக்டர்கள் ஜேகப் ஜான், ஆர்.பிரபாகர், கே. பாலசுப்பிரமணி, சொக்க நாதன், பி.சந்திரா மற்றும் ஆர்.விஸ்வநாதன் (மருந்து பிரதிநிதிகள் சங்கம்) உள் ளிட்டோர் பேசினர். கே. வனஜகுமாரி நன்றி கூறி னார். முன்னதாக பா.கரு ணாநிதி வரவேற்று பேசினார்.
Friday, February 20, 2009
அன்புமணிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்
Friday, January 23, 2009
போராட்டம் வெற்றி ! மூடப்பட்ட தடுப்பூசி மருந்து ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் தனியார் நிறுவனங்கள் ஏமாற்றியதால் மத்திய அரசு முடிவு
Monday, January 5, 2009
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் சில தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி’’
- “அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரநிர்ணயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும், மருந்துக் கம்பெனிகளிடமிருந்தும் பெறப்பட்டிருக்கிறதா?”
என்றும் பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.
மேலும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங் கள் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத் தை அடைவதற்கான முறையில் மேம்படுத்திட, ஆகும் செலவினத்தின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் மத்திய சுகாதார அமைச்ச கத்தைக் பிரதமர் அலுவல கம் கேட்டுள்ளது.
“மேற்படி பொதுத் துறை நிறுவனங்களை உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட அரசுக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். ஆனால் அதைச் செய்வதை விடுத்து, அதைவிட பல மடங்கு ரூபாய் கொடுத்து, தனியார் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசி மருந்துகளை வாங் கிக்கொண்டிருக்கிறது’’ என்று டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 11 கேள்விகளை எழுப்பியுள்ள பிரதமர் அலுவலகம், தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்த பொதுத்துறை நிறுவனங்களை மூடிய செயலானது, ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி யுள்ளது.
“ஐமுகூ அரசாங்கமானது உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதற்கு உத்தரவாதம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளும் என்று குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மருந்துகளின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வகைசெய்யும் விதத்தில் மேற்படி பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் புதுப்பிப்பதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயு மாறும்’’ பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
நன்றி தீக்கதிர்

